இரணியகசிபு
From Wikipedia, the free encyclopedia
இரணியகசிபு அல்லது இரணியன் {Hiranyakashipu or Hiranyakasipu) (சமசுகிருதம்: हिरण्यकशिपु), காசிபர் - திதி தம்பதியரின் மகன். இரணியாட்சனின் அண்ணன். விஷ்ணுவின் பத்து அவதாரங்களான தசாவதாரத்தில் நான்காம் அவதாரமான நரசிம்மர் வதம்செய்த அரக்கன். வட மொழியில் இரண்யம் எனில் தங்கம். கசிபு எனில் துணி. தங்கத்தால் ஆன துணியை அணிந்தவன் எனப்பொருள்.