![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/57/Vishnu_Avatars.jpg/640px-Vishnu_Avatars.jpg&w=640&q=50)
தசாவதாரம் (இந்து சமயம்)
அநீதிகளை அழித்து, நீதிகளை நிலைநாட்ட, யுகங்களின் முடிவில், மகாவிஷ்ணுவின் அவதாரங்கள்.. மொத்தம் 10. / From Wikipedia, the free encyclopedia
"தசாவதாரம்" redirects here. பிற பயன்பாட்டுக்கு பார்க்க தசாவதாரம்.
தசாவதாரம் என்பது இந்து சமயக் கடவுள் விஷ்ணுவின் பத்து அவதாரங்களைக் குறிப்பதாகும். இறைவன் பூமியில் பிறப்பெடுப்பதை அவதாரம் என்று இந்துகள் குறிப்பிடுகின்றார்கள். வைணவ சமயத்தின் முழுபெரும் கடவுளான விஷ்ணு உலகில் அதர்மம் ஓங்குகின்ற போது, பக்தர்களை காக்கவும், தர்மத்தினை நிலை நாட்டவும், அரக்கர்களை அழிக்கவும் அவதாரம் எடுப்பதாக வைணவர்கள் நம்புகின்றார்கள். அவ்வாறு பெருமாள் எடுத்த அவதாரங்களில் பத்து அவதாரங்கள் தச அவதாரங்கள் என்று வழங்கப்படுகின்றன. தசம் என்றால் பத்து என்று பொருள். மோகினி, வெங்கடாசலபதி, ஹயக்ரீவர் என இந்த தசவதாரப் பட்டியலில் இடம் பெறாத பெருமாளின் அவதாரங்களும் உள்ளன.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/57/Vishnu_Avatars.jpg/320px-Vishnu_Avatars.jpg)