![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6f/Rudyard_Kipling.jpg/640px-Rudyard_Kipling.jpg&w=640&q=50)
இரட்யார்ட் கிப்ளிங்
From Wikipedia, the free encyclopedia
ஜோசப் இரட்யார்ட் கிப்ளிங் (Joseph Rudyard Kipling - RUD-yərd; 30 திசம்பர் 1865 - 18 சனவரி 1936) [1] பிரித்தானிய இந்தியாவில் பிறந்த ஓர் ஆங்கிலப் புதின, சிறுகதை எழுத்தாளர், கவிஞர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார். பிரித்தானிய இந்தியாவின் தாக்கம் இவரது படைப்புகளில் இருந்தது.
இரட்யார்ட் கிப்ளிங் Rudyard Kipling | |
---|---|
![]() | |
பிறப்பு | யோசேப்பு ரட்யார்ட் கிப்ளிங் (1865-12-30)30 திசம்பர் 1865 பம்பாய், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 18 சனவரி 1936(1936-01-18) (அகவை 70) லண்டன், இங்கிலாந்து |
தொழில் | சிறுகதை, புதின எழுத்தாளர், கவிஞர், ஊடகவியலாளர் |
தேசியம் | பிரித்தானியர் |
வகை | சிறுகதை, புதினம், சிறுவர் இலக்கியம், கவிதை, பயண இலக்கியம், அறிவியல் புதினம் |
கருப்பொருள் | இந்தியா |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | த ஜங்கிள் புக் ஜஸ்ட் சோ ஸ்டோரீஸ் கிம் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | இலக்கியத்துக்கான நோபல் பரிசு (1907) |
கிப்லிங்கின் புனைகதை படைப்புகளில் ஜங்கிள் புக்கின் இரு படைப்புகள் ( தி ஜங்கிள் புக், 1894; தி செகண்ட் ஜங்கிள் புக், 1895), கிம் (1901), ஜஸ்ட் சோ ஸ்டோரிஸ் (1902) மற்றும் " தி மேன் ஹூ வுட் பி கிங் " (1888) உட்பட பல சிறுகதைகள் அடங்கும் [2] இவரது கவிதைகளில் " மண்டலே " (1890), " குங்கா தின் " (1890), "தெ காட்ஸ் ஆஃப் தெ காபிபுக் ஹெடிங்ஸ் " (1919), " தி ஒயிட் மேன்ஸ் பர்டன் " (1899), மற்றும் " இஃப்- " (1910) ஆகியவை அடங்கும். சிறுகதை கலையில் புதுமையான படைப்புகளை வழங்கியுள்ளார்.[3] குழந்தைகளுக்கான இவரது நூல்கள் தொன்மைய இலக்கிய வகையினைச் சேர்ந்தது. ஒரு விமர்சகர் இவரை " பல்துறை மற்றும் சிறப்பாக எடுத்துரைக்கும் பாணி கொண்டவர்" என்று குறிப்பிட்டார்.[4][5]