இயேசுவின் சாவு
From Wikipedia, the free encyclopedia
மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நற்செய்தியாளரும் தருகின்ற முக்கிய தகவல்களுள் ஒன்று இயேசுவின் சாவைப் பற்றியதாகும்[1].
பாலசுத்தீன நாட்டில் உரோமையரின் சார்பில் ஆளுநராக இருந்தார் பொந்தியு பிலாத்து. இவரது ஆட்சிக் காலத்தில்தான் இயேசு சிலுவையில் அறையப்பட்டுக் கொலையுண்டார். இத்தகவல்களைத் தருகின்ற நற்செய்தி நூல்களில் காணப்படும் பிற செய்திகள் இவை:
- இயேசுவைப் பின்சென்ற சீடர்களில் ஒருவராகிய யூதாசு இசுகாரியோத்துவும், இயேசுவுக்கு எதிரிகளாக மாறிவிட்ட தலைமைக் குருக்கள், மூப்பர்கள், மற்றும் மறைநூல் அறிஞர்கள் ஆகியோரும் ஒத்துழைத்துச் செயல்பட்டதால்தான் இயேசு கைதியாகப் பிடிக்கப்பட்டார்.
- யூதத் தலைவர்களும் உரோமையர் பெயரால் ஆட்சிசெய்த ஆளுநர் பிலாத்துவும் இயேசுவைத் தம் எதிரியாகக் கருதியதற்கு அடிப்படையான காரணம் என்னவென்பது பற்றி சரியான தெளிவில்லை.