From Wikipedia, the free encyclopedia
இன நல்லிணக்க நாள் (Racial Harmony Day) என்பது இனவாரியாக இணக்கமான நாடாக சிங்கப்பூரின் வெற்றியைக் கொண்டாடும் ஒரு நாளாகும். இது ஆண்டுதோறும் சூலை 21 இல் கொண்டாடப்படுகிறது. இந்நாளின் பெரும்பாலான நடவடிக்கைகள் மதக்குழுக்கள் உட்பட பாடசாலைகள் மற்றும் அடிமட்ட அமைப்புகளினால் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
இன நல்லிணக்க நாள் Racial Harmony Day | |
---|---|
கடைபிடிப்போர் | சிங்கப்பூர் |
வகை | மதச்சார்பற்றது |
முக்கியத்துவம் | 1964 இன வன்முறைகளின் நினைவாக |
நாள் | 21 சூலை |
நிகழ்வு | ஆன்டுதோறும் |
1964 சூலை 21 அன்று சிங்கப்பூர் மலேசியாவின் ஒரு பகுதியாக இருந்தபோது நிகழ்ந்த இனக்கலவரத்தை நினைவுகூரும் முகமாக பாடசாலைகளில் கல்வி அமைச்சினால் முதன்முதலில் 1997 ஆம் ஆண்டில் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. 1964 கலவரத்தின் போது 22 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். ஆகத்து 1965 இல் சிங்கப்பூரின் விடுதலைக்கு முன்னும் பின்னுமாக 50கள் மற்றும் 60களில் ஏராளமான இனக்கலவரங்களும் வன்முறைகளும் நிகழ்ந்தன.[1] இன்று, மக்கள் சங்கம் மற்றும் சமூக மேம்பாட்டுப் பேரவைகள் உட்பட பல அமைப்புகளும் இந்நாளை நினைவுகூரல் நிகழ்வுகளில் பங்குபற்றுகின்றன.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.