![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4e/Indradeva.jpg/640px-Indradeva.jpg&w=640&q=50)
இந்திராணி (சப்தகன்னியர்)
From Wikipedia, the free encyclopedia
இந்திராணி (ஒலிப்புⓘ) அல்லது சசி, (Shachi or Indrani) (queen of Indra), ; (சமசுகிருதம்): शची;), துவக்க வேத கால நாகரீகத்தில், இந்து சமயத்தில் ஏழு புகழ் மிக்க பெண் கடவுளர்களில் (சப்தகன்னியர்) ஒருவராக கருதப்படுபவர். இவளை ஐந்திரி என்றும் இந்திரா தேவி, ராஜேந்திரி, மகேந்திரி, நரேந்திரி என்றும் பௌமன் என்ற அசுர மன்னனின் மகள் என்பதால் பௌலோமி என்றும் வேதங்கள் அழைக்கிறது. இந்திரனின் மனைவியான இந்திராணி மிக அழகானவர். இந்திராணி சிங்கம் மற்றும் யானைகளுடன் தொடர்புடையவர். ஜெயந்தன் மற்றும் ஜெயந்தி (தெய்வானை) மற்றும் சித்திரகுப்தர் ஆகியோரின் தாயாவாள்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4e/Indradeva.jpg/640px-Indradeva.jpg)
நகுசன் கதையில் இந்திராணியை தொடர்புருத்தி பேசப்படுகிறது.