இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டம்
From Wikipedia, the free encyclopedia
இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டம் (Indira Gandhi Memorial Tulip Garden”)(மாதிரி மலர் வளர்ப்பு மையம்) என்பதுஇந்தியாவின் சம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள ஒரு துலிப் தோட்டம் ஆகும். இது ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டமாகும். இத்தோட்டம் சுமார் 30 பரப்பளவில் அமைந்துள்ளது.[1] இது தால் ஏரியின் பார்வையில் ஜபர்வான் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் மலர் வளர்ப்பு மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கத்துடன் 2007ஆம் ஆண்டு இந்த தோட்டம் திறக்கப்பட்டது.[2] இது முன்பு சிராஜ் பாக் என்று அழைக்கப்பட்டது.[3][4] சுமார் 1.5 மில்லியன் துலிப் பூக்கள், பல வண்ணங்களில், ஆம்ஸ்டர்டாமிலிருந்து கியூகென்ஹாஃப் துலிப் தோட்டத்திற்குக் கொண்டு வரப்பட்டன.[5] ஆலந்திலிருந்து கொண்டு வரப்பட்ட டாபோடிலசு, ஹைசின்த் மற்றும் ரான்குலசு உட்பட 46 வகையான பூக்கள் உள்ளன. துலிப் தோட்டத்தில் சுமார் 65 வகையான துலிப் மலர்கள் உள்ளன.[6]
இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டம் | |
---|---|
வகை | மலர்த்தோட்டம் |
அமைவிடம் | சபார்வான் சரகம், சிறிநகர், சம்மு காசுமீர், இந்தியா |
ஆள்கூறு | 34.096056°N 74.88003°E / 34.096056; 74.88003 |
பரப்பு | 30 ha (74 ஏக்கர்கள்) |
திறக்கப்பட்டது | 2007 |
Owned by | ஜம்மு காஷ்மீர் அரசு |
வருகையாளர் | 2,50,000 (2021) |
நிலை | திறந்துள்ளது |
Plants | 1.5 மில்லியன் |
Species | 64 |
Collections | துலிப் |
ஏழு அடுக்குகளைக் கொண்ட பாணியில் ஒரு சாய்வான தரையில் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. துலிப் மலர்கள் தவிர, பல வகையான பதுமராகம், டாபோடில்சு மற்றும் ரான்குலசு ஆகியனவும் சேர்க்கப்பட்டுள்ளன.