இந்தியக் குடியியல் பணிகள்
From Wikipedia, the free encyclopedia
இந்தியக் குடியியல் பணிகள், பொதுவாக குடியியல் பணிகள் என்று அழைக்கப்படும், அரசுப்பணிகள் இந்திய அரசினால் விடுதலைக்குப் பிறகு 1947இல் பிரித்தானிய அரசில் விளங்கிட்ட இந்தியக் குடியுரிமைப் பணியின் தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்ட உயரிய குடியியல் பணிகளாகும். இந்தியக் குடியியல் பணி அதிகாரிகள் இந்தியப் பிரதமரின் அலுவலகம் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
அண்மைக் காலத்தில் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பணிவாழ்வுகள் இளைஞரை ஈர்த்தாலும்,அமைக்கப்பட்ட நாட்களிலிருந்து இன்றுவரை இப்பணிகள் அவர்களின் முதல் விருப்பாக இருந்து வருகிறது.அரசியலமைப்பு புதிய பணிச்சேவைகளை ஏற்படுத்த நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் கொடுத்துள்ளது. இதன்படியே இந்திய வனப் பணி மற்றும் இந்திய வெளியாட்டுப் பணி சேவைகள் அமைக்கப்பட்டுள்ளன. பரந்த,பன்முக நாடான இந்தியாவின் இயற்கைவளம்,பொருளியல் மற்றும் மனிதவளங்களை மேலாண்மை புரிய இக்குடியியல் பணிகள் பெரிதும் துணைநிற்கின்றன. நடுவண் மற்றும் மாநில ஆட்சியாளர்களின் வழிகாட்டுதலுக்குகிணங்க பல்வேறு குடியியல் பணியாளர்கள் நாட்டின் சிறப்பான ஆளுமைக்கு வழிவகுக்கின்றனர்.