![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b2/Endometriosis.jpg/640px-Endometriosis.jpg&w=640&q=50)
இடமகல் கருப்பை அகப்படலம்
மகளிர் இனப்பெருக்கத் தொகுதி சார்ந்த நோய் / From Wikipedia, the free encyclopedia
இடமகல் கருப்பை அகணி (Endometriosis) அல்லது கருப்பை அகணி இடப்பெயர்வு அல்லது இடமகல் கருப்பை அகப்படலம் மகளிர் இனபெருக்கத் தொகுதியின் ஒருவகை நோயாகும். இந்நோயில் கருப்பை அகணியில்(அகப்படலத்தில்) இயல்பாக உள்ள உயிழைய அடுக்கின் உயிர்க்கலங்கள் கருப்பைக்கு வெளியிலும் வளர்கிறது.[6][7] இந்த வளர்ச்சி அடிக்கடி அண்டகங்கள் மேலோ, பலோப்பியக் குழல்களிலோ கருப்பை, அண்டகம் சார்ந்த இழையங்களிலோ நிகழ்கிறது; சில அரிய நேர்வுகளில் உடற்பகுதிகளிலும் ஏற்படுவதும் உண்டு.[2] இந்நோயின் சில அறிகுறிகளாக இடுப்புவலி, கடும் மாத விடாய்கள், வயிற்றசைவுகளில் வலி, இடமகல் கருப்பை அகணி, கருத்தரியாமைநிலை ஆகியன அமையலாம்.[1] இந்நோயுள்ள பாதி பேருக்கு நாட்பட்ட இடுப்புவலி ஏற்படுகிறது; இவரில் 70% பேருக்கு வலி மாத விடாயின்போதே வருகிறது.[1] பொதுவாக, புணர்ச்சியின்போது வலி வழக்கமாக அமைகிறது.[1] இந்நோயுள்ள பாதி பேருக்குக் கருத்தரியாமை நிலை ஏற்படுகிறது.[1] இந்நோயுள்ள 25% பேருக்கு அறிகுறி ஏதும் இருப்பதில்லை; மருத்துவமனையில் இந்நோய்வழி கருபொய்த்தல்நிலை இருப்பதாக அறிவிக்கப்பட்டவரில் 85% பேருக்கு வலி அமையவில்லை.[1][8] இந்நோய் சமூகவியல், உளவியல் ஆகிய இருவகை விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.[9]
இடமகல் கருப்பை அகணி Endometriosis | |
---|---|
![]() | |
வயிற்று அகநோக்கி அறுவையின்போது காணப்படும் இடமகல் கருப்பை அகணி | |
சிறப்பு | மகப்பேறியல் |
அறிகுறிகள் | இடுப்பு வலி, இடமகல் கருப்பை அகப்படலம், கருவுறாமை[1] |
வழமையான தொடக்கம் | 20-40 அகவை[2][3] |
கால அளவு | நாட்பட்டது[1] |
காரணங்கள் | அறியப்படவில்லை[1] |
சூழிடர் காரணிகள் | குடும்ப வரலாறு[2] |
நோயறிதல் | அறிகுறிகள் சார்ந்து, மருத்தவ படிமம் எடுத்தல், இழையக்கூறு ஆய்வு[2] |
ஒத்த நிலைமைகள் | இடுப்பு அழற்சி நோய், வயிற்று எரிச்சல் நோய்த்தொகை, இடுக்குசார் கல அழற்சி, மூட்டிழைய வலி[1] |
தடுப்பு | இணைநிலைக் கருத்தடுப்பு மருந்துகள், உடற்பயிற்சி, சாராயம், காபி தவிர்த்தல்[2] |
சிகிச்சை | NSAID மருந்துகள், தொடர் கருத்தடுப்பு மாத்திரைகள், கருச்சிதைவடக்கியுடன் கருப்பையகக் கருவி, அறுவை[2] |
நிகழும் வீதம் | 10.8 மில்லியன் (2015)[4] |
இறப்புகள் | ≈100 (100,000 பேருக்கு, 0.0 முதல் 0.1 வரை, 2015)[4][5] |
Endometriosis | |
---|---|
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | மகளிர் நலவியல் |
ஐ.சி.டி.-10 | N80. |
ஐ.சி.டி.-9 | 617.0 |
ம.இ.மெ.ம | 131200 |
நோய்களின் தரவுத்தளம் | 4269 |
மெரிசின்பிளசு | 000915 |
ஈமெடிசின் | med/3419 ped/677 emerg/165 |
பேசியண்ட் ஐ.இ | இடமகல் கருப்பை அகப்படலம் |
ம.பா.த | D004715 |
நோய்க்கான காரணம் தெளிவாக அறியப்படவில்லை.[10] இடர்க்காரணிகள் நோயின் குடும்ப வரலாறு சார்ந்தும் ஆமைகின்றன.[2] ஒவ்வொரு மாதமும் மாத விடாயின்போது இடமகல் கருப்பை அகணிப் பகுதிகள் குருதியைக் கசியவிட்டு, அழற்சியோடு கறைகளையும் தருகிறது.[1][2] இடமகல் கருப்பை அகணி வளர்ச்சிகள் புற்றல்ல.[2] நோயறிதல் வழக்கமாக அறிகுறிகள் சார்ந்தும் மருத்தவ படிமம் எடுத்தல் சார்ந்தும் அமைகிறது;[2] என்றாலும், திசுக்கூறு ஆய்வு மட்டுமே உறுதிமிக்க நோயறிதல் முறையாக உள்ளது.[2] ஒத்த அறிகுறிகளின் பிற காரணங்களாக, இடுப்பு அழற்சி நோய், வயிற்று எரிச்சல் நோய்த்தொகை, இடுக்குசார் உயிர்க்கல அழற்சி, மூட்டிழைய வலிஆகியன அமைகின்றன.[1]
இடமகல் கருப்பை அகணி வழக்கமாகத் தவறாகவே நோயறியப்படுகிறது. பெண்களுக்கு அவர்களின் அறிகுறிகள் இயல்பாக உள்ளதாகவோ அல்லது பொருளற்றதாக இருப்பதாகவோ அறிவிக்கப்படுகிறது.[9] பெண்கள் தம் இடமகல் கருப்பை அகணியின் நோயறிதல் சரியாக கிடப்பதற்குள் ஏழு மருத்தவரிடம் செல்லவேண்டி நேர்கிறது; இதற்கான அறிகுறிகள் ஏற்பட்ட பிறகு, இழையக்கூறு ஆய்வு செய்து அறுவையைச் செய்வதற்குள் சராசரியாக 6.7 நாட்கள் கால தாமதம் ஏற்படுகிறது; இதுவே நோயறி நிலைமைக்கான தங்கச் செந்தரமாகக் கருதப்படுகிறது. இந்தத் தாமதம் இடமகல் கருப்பை அகணியை நோயறியும் திறமையின் மிக அறுதிநிலை முடிவுக்கே கொண்டு சென்றுவிடுகிறது.[11]
கருத்தடை மாத்திரையின் பயன்பாடு, இடமகல் கருப்பை அகணி இடரைக் குறைப்பதாக தற்காலிகச் சான்று கூறுகிறது.[2][12]. உடற்பயிற்சியும் பெருங்குடியைத் தவிர்த்தலும் இவ்விடரைத் தவிர்க்க உதவுகின்றன.[2]இடமகல் கருப்பை அகணிக்கு மருத்துவம் ஏதும் இல்லை; என்றாலும் சில மருத்துவ முறைகள் ஓரளவு அறிகுறிகளை மேம்படுத்துகின்றன.[1] இவற்ரில் வலிநீக்கிகள், இயக்குநீர் மருத்துவங்கள், அறுவை ஆகியன அடங்கும்.[2]வலிநீக்கியாக, நாப்பிரோக்சென் போன்ற பருவகம் சாராத அழற்சித் தடுப்பு மருந்துகளே பரிந்துரைக்கப்படுகின்றன.[2]கருத்தடுப்பு மாத்திரையைத் தொடர்ந்து உட்கொள்வதும் ஆண்மை இயக்குநீரை கருவகக் கருவியால் பயனபடுத்துவதும் கூட நல்லபயன் தருகிறது.[2]கருத்தரிப்பியலாமை உள்ளவருக்கு பாலியல் தூண்டலை விடுவிக்கும் இயக்குநீர் கருவளத்தைக் கூட்டும்.[2] பிற மருத்துவ முறைகளில் அறிகுறிகளைக் கட்டுபடுத்த முடியாதபோது, இடமகல் கருப்பை அகணியஐ அறிவையால் நீக்கலாம்.[2]
2015 வரையிலான ஒரு மதிப்பீடு இதனால் 10.8மில்லியன் பேர் தாக்கமுறுவதாக கூறுகிறது.[4] பொதுவாக மகளிர் மக்கள்தொகையில், 6 முதல் பத்து நூற்றன்வீதம் பேர் தாக்கமுறுவதாக பிற தகவல் வாயில்கள் உரைக்கின்றன.[1] நோயணுகுநிலை வாய்ந்த மகளிரில் 2 முதல்11 % பேர்[10] தாக்கமுறுகின்றனர். மேலும், 11% பேர் மகளிர் பொதுவாக நோயறியவியலாத இடமகல் கருப்பை அகணியைப் பெற்றுள்ளனர். காந்த ஒத்திசைவு படிம முறையால் இவர்களது நோயை அறிய்லாம்.[13][14]முப்பது, நாற்பது அகவையினருக்கு இது மிகப் பொதுவாக அமைகிறது; என்றாலும், எட்டு அகவையிலேயே இந்நிலை தொடங்க வாய்ப்புள்ளது.[2][3] It results in few deaths with unadjusted and age-standardized death rates of 0.1 and 0.0 per 100,000.[4] 1920 இல் தான் இடமகல் கருப்பை அகணி ஒரு தனி மருத்துவ நிலையாக முதலில் அறியப்பட்டது.[15] இதற்கு முன்பு வரை, இடமகல் கருப்பை அகணியும் கருப்பை அகணி அழற்சியும் இணைத்து ஒன்றாகவே கொள்ளப்பட்டன.[15] இதை முதலில் விவரித்தவர் யார் எனத் தெரியவில்லை.[15]