ஆவிச்சி மெய்யப்பன்
இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் / From Wikipedia, the free encyclopedia
ஆவிச்சி மெய்யப்பச் செட்டியார், (ஏவிஎம், ஏ. வி. மெய்யப்பன்) (28 சூலை 1907–12 ஆகத்து 1979), ஓர் இந்தியத் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனரும், நன்கறியப்பட்ட சமூகத் தொண்டாற்றியவரும் ஆவார். இவர் வடபழனியில் உள்ள ஏவிஎம் புரொடக்சன்சு என்ற நிறுவனத்தை நிறுவியவர். தமிழ்த் திரைப்படத்துறையின் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.[2] தென்னிந்தியத் திரைத்துறையின் மும்மூர்த்திகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். (மற்ற இருவர் எஸ். எஸ். வாசனும் எல். வி. பிரசாத்தும்)[3]. தமிழ்த் திரையுலகில் ஐம்பது ஆண்டுகளாக மூன்று தலைமுறையினரால் வெற்றிகரமாக இயங்கிய ஒரே நிறுவனம் ஏவிஎம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இறக்கும் முன்னர் 167 திரைப்படங்களைத் தயாரித்திருந்தார். இவரது தயாரிப்பில் வெளியான திரைப்படங்களில் சில வாழ்க்கை, நாம் இருவர், சர்வர் சுந்தரம், மேஜர் சந்திரகாந்த், சிறீ வள்ளி, களத்தூர் கண்ணம்மா ஆகியன.
ஆவிச்சி மெய்யப்பச் செட்டியார் | |
---|---|
![]() | |
பிறப்பு | (1907-07-28)சூலை 28, 1907 காரைக்குடி, சென்னை மாகாணம், இந்தியா |
இறப்பு | ஆகத்து 12, 1979(1979-08-12) (அகவை 72) சென்னை |
செயற்பாட்டுக் காலம் | 1934–1973 |
வாழ்க்கைத் துணை | அலமேலு மெய்யப்பன், ராஜேஸ்வரி மெய்யப்பன்[1] |