ஆரஞ்சு நஸ்ஸாவ் வம்சம்
From Wikipedia, the free encyclopedia
ஆரஞ்சு நஸ்ஸாவ் வம்சம் (இடச்சு: Huis van Oranje-Nassau, pronounced [ˈɦœys fɑn oːˌrɑɲə ˈnɑsʌu]),[1] ஐரோப்பிய வம்சமான நஸ்ஸாவ் வம்சத்தின் ஒரு பிரிவே ஆரஞ்சு நஸ்ஸாவ் வம்சம் ஆகும். ஐரோப்பிய கண்டம் மற்றும் நெதர்லாந்து நாட்டின் ஆட்சி மற்றும் அரசு அமைவதில் பெரும்பங்கு வகித்தது. குறிப்பாக அரசர் வில்லியம் I மூலம் தம் ஆட்சிகாலத்தில் 80 (1568–1648) ஆண்டு போரின் முடிவில் இடச்சுகார்களின் ஸ்பெயின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் ஏற்பட்டு சுதந்திர இடச்சு தேசம் உருவாக வழிவகுத்தது.
இப் போரின் பல்வேறு காலகட்டத்தில் ஆரஞ்சு நஸ்ஸாவ் வம்சத்தைச் சேர்ந்த நபர்களே தலைமைவகித்தனர் இவர்களே நாட்டின் ஆளுநர்கள் அல்லது தலைவர்கள் ஆவர். பின் நாளில் நெதர்லாந்து நாட்டை ஆரஞ்சு நஸ்ஸாவ் வம்சம் தன் முடியாட்சியின் ஆளுகைக்குக் கீழ் கொண்டுவந்தது. இவ் வம்ச தலைவர்களே நாட்டின் அரசர்களாகவும் அரசிகளாகவும் இருந்து வருகின்றனர். தற்போதய தலைவரும் நாட்டின் அரசருமாக வில்லியம் அலெக்சாண்டர் இருந்துவருகிறார்.[2][3]