![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/87/AMER_FORT_and_lake.jpg/640px-AMER_FORT_and_lake.jpg&w=640&q=50)
ஆம்பர் கோட்டை
From Wikipedia, the free encyclopedia
ஆம்பர் கோட்டை அல்லது ஆமேர் கோட்டை (Amer Fort or Amber Fort) (இந்தி: आमेर क़िला) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் ஆம்பர் நகரத்தில் அமைந்துள்ளது. 4 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள ஆம்பர் கோட்டை[1] இராஜஸ்தான் மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூர் நகரத்திலிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்துள்ள ஆம்பர் கோட்டை ஒரு முதன்மைத் தொல்லியல் மற்றும் சுற்றுலா இடமாகும்.[2][3]
ஆம்பர் கோட்டை | |
---|---|
பகுதி: ஜெய்ப்பூர் | |
ஆம்பர், இராஜஸ்தான், இந்தியா | |
![]() | |
பாம்பு வடிவ படிகற்களுடன் கூடிய ஆம்பர் கோட்டையின் முன்புறத் தோற்றம் | |
ஆள்கூறுகள் | 26.9859°N 75.8507°E / 26.9859; 75.8507 |
வகை | கோட்டை மற்றும் அரண்மனை |
இடத் தகவல் | |
கட்டுப்படுத்துவது | இராஜஸ்தான் அரசு |
மக்கள் அனுமதி |
ஆம் |
நிலைமை | நல்ல நிலையில் |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 1592 |
கட்டியவர் | இராஜா மான் சிங் |
கட்டிடப் பொருள் |
மணற்கல் மற்றும் பளிக்குக் கல் |
ஆம்பர் கோட்டை பல திரட்டப்பட்டுள்ள பாதைகளுடன் கூடிய நுழைவாயிற் கதவுகளுடனும் கூடியது. கோட்டையில் பல அரண்மனைகளும், ஒரு ஏரியுடனும் கூடியது.[3][4][5][6][7][8] இந்த ஏரியின் நீர் ஆதாரத்தை நம்பியே கோட்டையும் அரண்மனைகளும் உள்ளது.[9]
கோட்டையினுள் உள்ள மணற்கற்களாலும், பளிங்குக் கற்களாலும் கட்டப்பட்ட அரண்மனை திவானி ஆம் எனப்படும் பொது மக்கள் கூடும் மாளிகை, திவானி காஸ் எனப்படும் எனப்படும் அரண்மனைக் குடும்பத்தினர் மட்டும் கூடும் மாளிகை, கண்ணாடி மாளிகை எனப்படும் ஜெய் மந்திர் , செயற்கை நீரூற்றுகளுடன் கூடிய மாளிகை என நான்கு அழகியல் சுற்றுப்புறத்தைக் கொண்ட மாளிகைகளுடன் கூடியது என்பதால் இக்கோட்டையை ஆம்பர் கோட்டை எனப்பெயராயிற்று.[4]
ஆம்பர் கோட்டையின் அரண்மனை இராசபுத்திர குல மன்னர்களும்; குடும்பத்தினரும் வாழிடமாக இருந்தது. கோட்டையின் கணபதி நுழைவாயில் அருகில் உள்ள சிலா தேவியின் உருவச்சிலை, தற்கால வங்காள தேசத்தின் ஜெஸ்சூர் இராஜாவை, 1604இல் இராஜா மான் சிங் வெற்றி கொண்டமைக்காக வழங்கப்பட்டது.[3][10][11]
இராஜஸ்தானின் மலைக் கோட்டைகளில் ஆம்பர் கோட்டையும், உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனேஸ்கோ நிறுவனம் 2013ஆம் ஆண்டில் அறிவித்துள்ளது.[12][13]