ஆக்ரா மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
ஆக்ரா மாகாணம் (Agra Province) குடிமைப்பட்ட கால இந்தியாவை ஆண்ட பிரித்தானிய இந்தியா ஆட்சியாளர்களால் நிறுவப்பட்ட மாகாணங்களில் ஒன்றாகும். இம்மாகாணம் 1836-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதன் தலைநகரம் அலகாபாத் நகரம் ஆகும். பின்னர் இம்மாகாணப் பகுதிகள் ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணத்தில் 1902–ஆம் ஆண்டு முதல் 1937-ஆம் ஆண்டு வரை செயல்பட்டது. மீண்டும் ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம் ஏப்ரல் 1937-ஆம் ஆண்டில் புதிதாக நிறுவப்பட்ட ஐக்கிய மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. ஐக்கிய மாகாணத்தில் தற்கால உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களின் பகுதிகள் இருந்தது.[1][2][3]