அஷ்டமுடி ஏரி
From Wikipedia, the free encyclopedia
அஷ்டமுடி ஏரி (Ashtamudi Lake) இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கொல்லம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது இரண்டாவது ஆழமான மற்றும் பெரிய ஏரியாகும். அஷ்டமுடி என்பதற்கு எட்டு மகுடம் என்று மலையாளம் மொழியில் பொருள். (அஷ்டம்=எட்டு , முடி= மகுடம்) . இந்த ஏரியை மேலே இருந்து பார்த்தால் பல்வேறு கிளைகளுடன் எட்டு மகுடங்களைக் கொண்டுள்ளது போல் தோற்றமளிக்கும். மேலும் இது கேரளாவின் கழிமுகங்களின் (காயல்) நுழைவாயில் என அழைக்கப்படுகிறது.[1][2][3][4] இக்கழிமுகத்தின் இருபுறங்களிலும் தென்னை மற்றும் பனை மரங்கள் உள்ளன. இவற்றினூடே கிராமங்கள் அமைந்துள்ளன. கொல்லம் படகுச் சங்கம் மூலம் இயக்கப்படும் படகுகள் பொதுமக்களின் சவாரிக்காக இக்கழிமுகத்தில் இயக்கப்படுகிறது. இதைத்தவிர சொகுசுப் படகுகளும் இயக்கப்படுகின்றன. இச் சொகுசுப் படகில் பயணம் 8 மணி நேரங்கள் ஆகும். இச்சொகுசுப் படகானது காயல்கள், மற்றும் கிராமங்களின் வழியாகச் செல்லுவதால் அக்கழிமுகத்தின் சுற்றுப்புறங்களை முழுவதும் ரசிக்க முடியும்.
அஷ்டமுடி ஏரி | |
---|---|
அமைவிடம் | கொல்லம், கேரளா |
ஆள்கூறுகள் | 8°59′N 76°36′E |
வகை | Endorheic உப்புநீர் |
வடிநிலப் பரப்பு | 1,700 km2 (660 sq mi) |
வடிநில நாடுகள் | இந்தியா |
அதிகபட்ச ஆழம் | 6.4 m (21 அடி) |
நீர்க் கனவளவு | 76,000,000,000 km3 (1.8×1010 cu mi) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 10 m (33 அடி) |
உறைவு | 19 ஆகஸ்டு 2002 |