![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e4/Third_Shahi_Snan_in_Hari_Ki_Pauri.jpg/640px-Third_Shahi_Snan_in_Hari_Ki_Pauri.jpg&w=640&q=50)
அரித்துவார் கும்பமேளா
அரித்துவாரில் ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் நீராட்டு சடங்கு / From Wikipedia, the free encyclopedia
அரித்துவார் கும்பமேளா (கிண்ணத் திருவிழா) (Haridwar Kumbh Mela) என்பது இந்தியாவின் உத்தராகண்டம் மாவட்டத்திலுள்ள அரித்துவாரில் ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் கும்பமேளாவாகும். இந்து சோதிடத்தின்படி சரியான தேதி தீர்மானிக்கப்படுகிறது : வியாழன் கும்பத்தில் இருக்கும் போதும் சூரியன் மேழத்தில் நுழையும் போது இந்தத் திருவிழா நடத்தப்படுகிறது.[1]
அரித்துவார் கும்பமேளா | |
---|---|
![]() 14 ஏப்ரல் 2010 அன்று ஹரனின் படித்துறையில் புனித நீராட்டத்திற்காக யாரீகர்கள் கூடியுள்ளனர் | |
நிகழ்நிலை | நடைமுறையில் உள்ளது |
வகை | திருவிழா, மதக் கூட்டம் |
காலப்பகுதி | ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை |
நிகழ்விடம் | கங்கை ஆற்றங்கரை |
அமைவிடம்(கள்) | அரித்துவார், உத்தராகண்டம் |
ஆள்கூறுகள் | 29.958°N 78.171°E / 29.958; 78.171 |
நாடு | இந்தியா |
முந்தைய நிகழ்வு | 2021 |
அடுத்த நிகழ்வு | 2033 |
பங்கேற்பவர்கள் | அகாராக்கள், யாத்ரீகர்கள், வணிகர்கள் |
வலைத்தளம் | |
kumbhmelaharidwar |
இந்த நிகழ்வு இந்துக்களுக்கும் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட பிறருக்கும் ஆழ்ந்த மத முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. வரலாற்று ரீதியாக, இது ஒரு முக்கியமான வணிக நிகழ்வாக இருந்துள்ளது. அரேபியாவிலிருந்து வணிகர்கள் இந்தத் திருவிழாவில் கலந்து கொண்டுள்ளனர்.[2]
கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 30 வரை அரித்துவார் கும்பமேளா நடத்தத் திட்டமிடப்பட்டது.[3] ஒரு கும்பமேளா முடிந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அர்த்த கும்ப மேளா ("அரை கும்பம்") நடைபெறுகிறது. கடந்த அர்த் கும்ப மேளா 2016இல் நடந்தது