![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2b/Thamarai-Namam2.png/640px-Thamarai-Namam2.png&w=640&q=50)
அய்யா வைகுண்டர்
கலியுகக் கடவுள் / From Wikipedia, the free encyclopedia
அய்யா வைகுண்டர் (c.1833 –c.1851) (தமிழ்: அய்யா வைகுண்டர், சமக்கிருதம்: अय्या वैघुण्ढर्, மலையாளம்: അയ്യാ വൈകുണ്ഠർ) அல்லது சிவ நாராயணர்[1] ஏகப்பரம்பொருளின் ஏகனேக அவதாரமாவார் . அவர் நாராயணருக்கும் லட்சுமி தேவிக்கும் மகனாக திருச்செந்தூர் கடலினுள் கொல்லம் ஆண்டு 1008, மாசி மாதம் 20-ஆம் தியதி அவதரித்தார்.[2] மும்மூர்தியினரின் நாமரூபங்களை ஏற்று, அனைத்து தெய்வ சக்திகளையும் உள்ளடக்கி நாராயணர் தனது ஒன்பதாம் பிறப்பை, வைகுண்ட அவதாரத்துக்கு முன்பு திருச்செந்தூர் கடற்கரையில் எடுக்கிறார்.[3] தனது ஒன்பதாம் பிறப்பை எடுக்கும் இந்த நாராயணரே, பின்னால் வைகுண்டக்குழந்தையை பெற்றெடுக்கப்போகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.[4] இன்னிகழ்வுகள் அனைத்தும் கலியனை சம்ஹாரம் செய்யவும், கலியுகத்தை பூர்த்தி செய்யவும் நாராயணரின் அடுக்கடுக்கான செயல்திட்டங்களின் பகுதியே ஆகும்.
![]() | இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
முன்னர், கலியுகத்தின் அறுதிகாலகட்டம் நெருங்கி வரவே, வைகுண்டரை பெற்றெடுப்பதற்காக பிரபஞ்சத்தின் அனைத்து பெண்சக்திகளையும் உள்ளடக்கி லெட்சுமி தேவியை மகரமாக திருச்செந்தூர் கடலினுள் வளர விட்டிருந்தார் நாராயணர்.[5] நாராயணர் அருளால் இந்த லெட்சுமியின் கருவிலே ஏகப்பரம்பொருள் வைகுண்டராக பிறக்கிறார்.[6] பிறந்த உடனேயே கலியை அழித்து தர்ம யுகத்தை தொற்றுவிப்பதற்கான அவருக்கான சாசனம் ’விஞ்சை’ என்னும் பெயரில் கடலினுள்ளேயே நாராயணரால் வைகுண்டருக்கு வழங்கபடுகிறது.[7]
நாராயணர் தாமே வைகுண்டராக பிறக்கிறார் என்னும் கூற்று அகிலத்திரட்டு அம்மானையில் மேலோங்கியிருந்தாலும், 'கலியழிப்பு' 'தர்மயுகத் தோற்றம்' என்ற இரு நோக்கங்களுக்காக நாரண-வைகுண்டர், நாராயணர் வைகுண்டர் என்ற இரு வேறு ஆளுமைகளாக, காலவோட்ட பின்னலில் ஒரே நேர்கோட்டை சுற்றும் இரு துருவங்களாக சூக்ஷும்மாக செயல்படுகின்றனர்.[8] இதையே வேறு விதமாக சொன்னால், நாராயணர் தனது கலியழிப்பு பணியின் சூக்ஷும்மான நிலைகளமாக வைகுண்டர் விளங்குகிறார். மும்மூர்த்திகள் முதலான 33 கோடி தேவர்கள் மற்றும் 44 கோடி தேவ ரிஷிகளின் தவங்களின் பயனாகவும், அவர்களை கலி ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுக்கவும் வைகுண்டரின் பிறவி அமைவதால்[9] பிரபஞ்சத்தின் அனைத்து ஆண்/பெண் தெய்வ சக்திகளின் ஒருங்கிணைந்த வடிவமாக அவர் அமைவதோடு, அனைவரின் வணக்கத்துக்குரிய ஏகமூர்த்தியாக வைகுண்டர் திகழ்கிறார்.[10]
மறுமுனையில், அவர் சமீப கால்கட்டத்தினர் ஆதலால் ஒரு புராண பாத்திரமாக மட்டுமில்லாமல் அவர் வரலாற்றிலும் வெகுவாக அறியப்படுகிறார்.[11] அகிலத்திரட்டில் காணப்படும் அவரின் போதனைகள், செயல்பாடுகள் ஆகியவற்றுள் பெரும்பாலானவை புற சமகால வரலாற்று குறிப்புகளிலும் காணப்படுகின்றன.[12] பரந்து விரிந்த அவரின் ஆன்மீக ஆளுமையும், போதனைகளும் பெரும்பாலும் அகிலத்திரட்டிலேயே காணப்படுகின்ற போதிலும் அவர் வாய்மொழி மூலமாகவும் போதித்தார்.[13] அவரின் வாய்மொழி போதனைகள் பத்திரம், சிவகாண்ட அதிகார பத்திரம், திங்கள் பதம், சாட்டு நீட்டோலை என பல புத்தகங்களாக தொகுக்கப்பட்டுள்ளன.[14] சமய உருவாக்கம், சமய ஒருங்கிணைவு போன்ற செயல்பாடுகள் அகிலத்திரட்டின் போதனைகளுக்கு நேரெதிரானவை என்றாலும்[15] அகிலத்திரட்டும், அருள் நூலில் காணப்படும் சில புத்தகங்களும் அய்யாவழி என்னும் சமய உருவாகத்தின் அடிப்படையாக அமைந்துள்ளது.[16] அய்யா வைகுண்டர் கடலிலிருந்து வெளிப்பட்ட தினமான மாசி 20-ஆம் நாள் (மார்ச்-3 அல்லது மார்ச்-4) வைகுண்ட அவதார தினமாக கொண்டாடப்படுகிறது.[17]
இது சார்பு கட்டுரைகளின் பாகமான அய்யாவழி | |
![]() | |
அய்யாவழியின் வரலாறு | |
கோட்பாடுகள் | |
ஏகம்- அடிப்படை ஒருமை | |
புனித நூல்கள் | |
அகிலத்திரட்டு அம்மானை | |
வழிபாட்டுத்தலங்கள் | |
சமயவியல் | |
அய்யாவழி புத்தகங்கள் | |
சமயச்சடங்குகள்
முதன்மை போதனைகள் | |
சார்ந்த நம்பிக்கைகள் | |