ஏபியேசியே
தாவரக் குடும்பம் / From Wikipedia, the free encyclopedia
ஏபியேசியே அல்லது உம்பெலிபெரே (Apiaceae or Umbelliferae ) என்பது பெரும்பாலும் நறுமணப் பூக்கும் தாவர இனங்களைக் கொண்ட தாவரக் குடும்பமாகும். இதற்கு ஏபியம் மாதிரி பேரினத்தின் பெயரிடப்பட்டது. மேலும் இக்குடும்பம் பொதுவாக செலரி, கேரட் அல்லது வோக்கோசு குடும்பம் அல்லது அம்பெல்லிஃபர்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது பூக்கும் தாவரங்களில் 16 வது பெரிய குடும்பமாகும். இதில் சுமார் 446 பேரினங்களும், 3,800க்கும் மேற்பட்ட இனங்களும் உள்ளன.[1] இந்த குடும்பத்தில் ஓமம், ஏஞ்சலிகா, சோம்பு, பெருங்காயம், கேரவே, மஞ்சள் முள்ளங்கி, சிவரிக்கீரை, தோட்டப் பூண்டு , கொத்தமல்லி, சீரகம், சதகுப்பி, பெருஞ்சீரகம், லோவேஜ், மாட்டு வோக்கோசு, வோக்கோசு, பார்ஸ்னிப், கடல் ஹோலி, சில்பியம், போன்ற நன்கு அறியப்பட்ட மற்றும் பொருளாதார ரீதியாக முக்கியமான தாவரங்களும், அடையாளம் தெளிவாக இல்லாத மற்றும் அழிந்து போகக்கூடிய ஒரு தாவரங்களும் உள்ளன.[2]
ஏபியேசியே | |
---|---|
Apiaceae: Apium leaves and tiny inflorescences, Daucus habit, Foeniculum inflorescences, Eryngium inflorescences, Petroselinum root. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம் |
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி |
உயிரிக்கிளை: | |
வரிசை: | Apiales |
குடும்பம்: | Apiaceae Lindl. |
மாதிரிப் பேரினம் | |
Apium L. | |
Subfamilies | |
| |
வேறு பெயர்கள் | |
Umbelliferae |