அசாமிய இலக்கிய மன்றம்
From Wikipedia, the free encyclopedia
அசாம் சாகித்திய சபா (Assam Sahitya Sabha) என்பது அசாமிய மொழியையும், இலக்கியத்தையும் வளர்ப்பதற்காக இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு மன்றம் ஆகும். அரசியல் நோக்கமற்றதாகவும் இலாப நோக்கமற்றதாகவும் அசாமின் இந்த இலக்கிய மன்றம் செயல்பட்டு வருகிறது. அசாம் மற்றும் அசாமிய இலக்கியங்களின் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக அசாமில், 1917 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இம்மன்றம் நிறுவப்பட்டது. தற்போது அசாமிலும் அசாம் மநிலத்திற்கு வெளியிலுமாக கிட்டத்தட்ட ஆயிரம் கிளைகளை இந்நிறுவனம் பெற்றுள்ளது. அசாம் சாகித்திய சபாவின் மைய்ய அலுவலகம் அசாமின் பண்பாட்டுத் தலைமையகமாகத் திகழக்கூடிய வரலாற்றுச் சிறப்பு மிக்க யோர்காட்டு நகரத்தில் அமைந்துள்ளது. இந்நிறுவனத்தின் அனைத்து கிளைகளுக்கும் மாவட்ட அலகுகளுக்கும் அவை இருக்கும் பகுதிகளிலேயே தலைமை அலுவலகமும் அமைந்துள்ளது [1].