அங்கோர் தோம் நகரம்
கம்போடிய நகரம் / From Wikipedia, the free encyclopedia
அங்கோர் தோம் நகரம், இன்றைய கம்போடியாவில் அமைந்துள்ளது. இது நோகோர்தோம் எனவும் அழைக்கப்படுகிறது. இது கெமர் பேரரசின் கடைசி மற்றும் நீடித்த தலைநகரம் ஆகும். இது பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மன்னர் ஏழாம் செயவர்மன் அவர்களால் நிறுவப்பட்டது.[1] :378–382 :170 இது 9 கி.மீ சதுர பரப்பளவை உள்ளடக்கியது. இந்த நகரத்திற்குள் முந்தைய காலங்களிலிருந்த பல நினைவுச்சின்னங்கள் மற்றும் செயவர்மன் மற்றும் அவரது வாரிசுகள் நிறுவியவை உள்ளன. நகரின் மையத்தில் செயவர்மனின் மாநில ஆலயமான பேயோன் உள்ளது. மற்ற முக்கிய இடங்கள் வெற்றிச் சதுக்கத்தைச் சுற்றி வடக்கு திசையில் அமைந்துள்ளன. இந்த நகரம் ஒரு மிகப் பெரிய சுற்றுலாத்தலமாக உள்ளது. மேலும் இதைக் கண்டுகளிக்க உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் வருகிறார்கள்.