அகிலன்
சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் / From Wikipedia, the free encyclopedia
அகிலன் (Akilan) என்று அறியப்படும் பி. வி. அகிலாண்டம் (சூன் 27, 1922 - சனவரி 31, 1988) தமிழக எழுத்தாளர் ஆவார். எதார்த்தம் மற்றும் ஆக்கப்பூர்வமான எழுத்து நடைக்குப் பெயர் பெற்றவராக அகிலன் அறியப்படுகிறார். அகிலன் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். சிறப்புப் பெற்ற புதின ஆசிரியராக, சிறுகதையாளராக, நாடகாசிரியராக, சிறுவர் நூலாசிரியாராக, மொழிப்பெயர்ப்பாளராக, கட்டுரையாளராக இவருக்குப் பல முகங்கள் உண்டு.[2] தமிழில் இருபது நாவல்கள், இருநூறு சிறுகதைகள், கட்டுரைகள், நாடகம், சிறுவர் கதைகள், மொழிபெயர்ப்புகள் எனப் பல வடிவங்களில் சமூகம் சார்ந்த படைப்புகளை அகிலன் வழங்கியுள்ளார்.[3]
விரைவான உண்மைகள் அகிலன், பிறப்பு ...
அகிலன் | |
---|---|
பிறப்பு | பி. வி. அகிலாண்டம் (1922-06-27)27 சூன் 1922 பெருங்களூர், புதுக்கோட்டை, இந்தியா |
இறப்பு | சனவரி 31, 1988(1988-01-31) (அகவை 65)[1] |
பணி | எழுத்தாளர் |
அறியப்படுவது | புதின, சிறுகதை எழுத்தாளர் |
மூடு