வள்ளிநாயகி இராமலிங்கம்
From Wikipedia, the free encyclopedia
குறமகள் என்ற பெயரில் எழுதி வந்த வள்ளிநாயகி இராமலிங்கம் (சனவரி 9, 1933 - செப்டம்பர் 15, 2016) ஈழத்து மூத்த பெண் எழுத்தாளர் ஆவார். சிறுகதைத் துறையில் தனக்கென ஓரிடத்தைப் பெற்றவர்.[1]
குறமகள் | |
---|---|
![]() | |
பிறப்பு | வள்ளிநாயகி இராமலிங்கம் 9 சனவரி 1933 காங்கேசன்துறை, யாழ்ப்பாண மாவட்டம், இலங்கை |
இறப்பு | செப்டம்பர் 15, 2016 83) கனடா | (அகவை
தேசியம் | இலங்கைத் தமிழர் |
மற்ற பெயர்கள் | கனடா |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
பெற்றோர் | முக்கந்தர் சின்னத்தம்பி, செல்லமுத்து |
வாழ்க்கைத் துணை | இராமலிங்கம் |
வாழ்க்கைக் குறிப்பு
இடம்பெயர்ந்து கனடாவில் வசித்து வந்த வள்ளிநாயகி இராமலிங்கம், காங்கேசன்துறையில் பிறந்தவர். முக்கந்தர் சின்னத்தம்பி, செல்லமுத்து தம்பதிகளின் மூத்த புதல்வி. காங்கேசன்துறை நடேசுவராக் கல்லூரியிலும், இளவாலை கொன்வென்டிலும் கல்வி கற்ற இவர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்று பயிற்றப்பட்ட ஆசிரியரானார். கொழும்புப் பல்கலைக்கழத்தில் நாடகவியலிலும், கல்வியியலிலும் டிப்ளோமா பட்டம் பெற்றார்.[2] 27 ஆண்டுகள் பாடசாலை ஆசிரியராகவும் எட்டு ஆண்டுகள் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இலக்கியப் பயணம்
1955 அளவில் இவரது முதலாவது சிறுகதையான 'போலிக் கௌரவம்' ஈழகேசரியில் பிரசுரமானது. இவரது கதைகள் ஈழகேசரி, சுதந்திரன், வீரகேசரி, தினகரன், கலைச்செல்வி, ஆனந்த விகடன் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது "குறமகள் கதைகள்", "உள்ளக் கமலமடி" ஆகிய நூல்கள் மித்ர வெளியீடாக வெளிவந்துள்ளன.
பெண்களின் சமூக விடுதலைக்கான கருத்துக்களை மையமாகக் கொண்டு கதைகளை எழுதியவர். இலங்கையின் பல்வேறு பத்திரிகைகளிலும் இவரது கதைகள் வந்துள்ளன. சிறுகதைகள் மட்டுமன்றி கட்டுரைகள், கவிதைகள் என்பவற்றிலும் தம் ஆளுமையைக் காட்டியுள்ளார். ஐவருடன் சேர்ந்து "மத்தாப்பு" என்ற குறுநாவலில் மஞ்சள் வர்ணத்தை வைத்து ஒரு அத்தியாயத்தை எழுதியுள்ளார். மாணிக்கம் இதழில் பிரபல எழுத்தாளர்கள் சிலருடன் சேர்ந்து "கடல் தாரகை" என்ற குறுநாவலை எழுதியுள்ளார். இவர் சிறந்த சொற்பொழிவாளர். பல இலக்கிய வெளியீடுகளில் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
1954-ம் ஆண்டிலிருந்து சிறுகதை, கட்டுரை, கவிதை என இவரின் ஆக்கங்கள் தொடங்கின. இவர் எழுதிய சிறுகதைகளுள் பிரபலமான சில:
- வாழ்வைத் தேடு.
- பிரிவும் இன்பம் தரும்.
- ஆளுமைகள் அழிகின்றன.
- ஒரு படம் பூரணத்துவம் பெறுகின்றது.
- அவள் கொடுத்த விலை.
- வாழ்க்கையின் திருப்பங்களும் வானத்துக் குழந்தைகளும்.
இவருடைய ஆக்கங்கள்
- குறமகள் கதைகள் - (2000)
- உள்ளக்கமலமடி - (2001)
- இராமபாணம் (கட்டுரைகள்)
- ஈழத்து றோஜா
- குருமோகன் பாலர் பாடல்கள்
- மாலை சூட்டும் நாள் (கவிதைகள்)
உசாத்துணைகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.