மனோகர் லால் கட்டார்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
மனோகர் லால் கட்டார் (Manohar Lal Khattar, பிறப்பு: மே 5, 1954) அரியானாவின் முதல் பாரதிய ஜனதா கட்சி முதல்வராக பதவி வகித்தார்.[3][4]. இவர் முதல்வராக அக்டோபர் 21, 2014 தேர்வு செய்யப்பட்டார்.. இவர் ஆர்.எஸ்.எஸ் இன் முன்னாள் பரப்புரையாளர் ஆவார்.[5]
மனோகர் லால் கட்டார் | |
---|---|
मनोहर लाल खट्टर | |
![]() 2019இல் கட்டார் | |
ஹரியானா மாநில முதலமைச்சர் | |
பதவியில் அக்டோபர் 26, 2014 – மார்ச்சு 12, 2024 | |
ஆளுநர் | கட்பன் சிங் சோலங்கி |
முன்னையவர் | பூபேந்தர் சிங் ஹூடா |
பின்னவர் | நயாப் சிங் சைனி |
தொகுதி | கர்னால் (ஹரியானா சட்டமன்றத் தொகுதி) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 மே 1954[1] நிந்தனா கிராமம், மகம் வட்டம், ரோத்தக் மாவட்டம், ஹரியானா, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | திருமணமாகாதவர் |
முன்னாள் மாணவர் | தில்லி பல்கலைக்கழகம் |
பணி | அரசியல்வாது, வேளாண்மை |
இணையத்தளம் | manoharlalkhattar |
[2] | |
வாழ்க்கைக் குறிப்பு
இவர் பிறந்தது அரியானா மாநிலத்திலுள்ள, ரோத்தக் மாவட்டத்தைச் சேர்ந்த நிந்தனா கிராமம் ஆகும். 1954 ஆம் ஆண்டு ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது குடும்பம், இந்திய தேசப் பிரிவினைக்குப் பிறகு, இன்றைய பாகிஸ்தான் பஞ்சாப் பகுதியில் இருந்து, அரியானாவுக்கு இடம் பெயர்ந்த குடும்பமாகும்[2].
ஆர்.எஸ்.எஸ். இயக்கம்
மனோகர் லால் கட்டார், 1977ஆம் ஆண்டில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் சேர்ந்தார். 1980-இலிருந்து 1994 இல் பாரதிய ஜனதா கட்சியில் இணையும் வரை இயக்கத்தின் முழு நேரப் பிரசாரகராக 14 ஆண்டுகள் செயற்பட்டார்[2][6][7]
அரசியல்
2000-2014 காலகட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் அரியானா மாநிலப் பொதுச்செயலாளராகப் பதவி வகித்தார்[2]. 2014 மக்களவைத் தேர்தலில், அரியானா மாநில தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராகவும் செயல்பட்டார்[8]. 2014-இல் அரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கர்னால் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள இவர், அரியானா மாநில முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.[9].
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.