From Wikipedia, the free encyclopedia
2017 அரியானா கலவரம் என்பது 25 ஆகத்து 2017 அன்று இந்தியாவின் அரியானா மாநிலத்தின் பஞ்ச்குலா நகரத்தில் தொடங்கிய வன்முறைகளைக் குறிக்கும். இக்கலவரம் அரியானா, பஞ்சாப் மாநிலங்களின் பிற பகுதிகளுக்கும் நாட்டின் தலைநகர் புது தில்லிக்கும் பரவியது.[1] இந்த வன்முறைச் செயல்களில் 36 பேர் கொல்லப்பட்டனர்; 250 பேர் காயமடைந்தனர்.[2]
2017 அரியானா கலவரம் | |
---|---|
தேதி | 25 ஆகத்து 2017 |
அமைவிடம் | |
காரணம் | குர்மீத் ராம் ரகீம் சிங் என்பவர் வன்புணர்வு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் |
உயிரிழப்புகள் | |
இறப்பு(கள்) | 36 |
காயமுற்றோர் | 250+ |
கைதானோர் | 3 |
காவலில் இருத்தி வைக்கப்பட்டோர் | 1000 |
பஞ்சாப்பிலுள்ள மாலவுட், பல்லுவானா ஆகிய இரு தொடருந்து நிலையங்கள் தீவைப்புக்கு உள்ளாகின. டெல்லியிலுள்ள ஆனந்த் விகார் தொடருந்து நிலையத்தில் ரெவா விரைவுத் தொடருந்தின் காலியான இரண்டு பெட்டிகள் தீ வைக்கப்பட்டன.[3] என்டிடிவி செய்தித் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு வாகனம் தாக்கப்பட்டதில், ஒளிபரப்புப் பொறியாளர் காயமடைந்தார். சிர்சா நகரில், இந்தியா டுடே செய்தித் தொலைக்காட்சியின் குழு தாக்கப்பட்டதில் ஒளிப்படக்காரர் காயமடைந்தார். பஞ்சாப்பின் மன்சா நகரில், காவற்துறை வாகனங்கள் 2 கொளுத்தப்பட்டன.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.