திரைப்படங்களுக்குப் பின்னணியில் இருந்து பாடும் பாடகர் From Wikipedia, the free encyclopedia
பின்னணிப் பாடகர் (Playback singer) என்பவர் திரைப்படம் மற்றும் கலைத்துறையில் இடம்பெறும் பாடல்களுக்காக பின்னணியில் இருந்து குரல் கொடுக்கும் பாடகர் ஆவார். நிகழ்படத்தில் நடிகர்கள் வாயசைக்க மட்டும் செய்வர். பின்னணிப் பாடகர்கள் பாடும் பாடல்கள் தனியே ஒலிப்பதிவு செய்யப்பட்டு பின் நிகழ்படத்துடன் ஒன்றிணைக்கப்படுகின்றன.
இந்திய துணைக் கண்டத்தில் தயாரிக்கப்படும் தெற்காசியத் திரைப்படங்களில் குறிப்பாக இந்திய மொழித் திரைப்படங்களில் மற்றும் பாகிஸ்தானியத் திரைப்படத்துறையிலும் பின்னணிப் பாடகர்கள் பெரும்பாலும் பணியில் அமர்த்தப்படுகின்றனர். முதல் பேசும் இந்தியத் திரைப்படமான ஆலம் ஆரா (1931) என்ற படத்திற்கு பிறகு பல ஆண்டுகளாக பாடகர்கள் ஒரு படத்திற்காக இரட்டை பதிவுகளைச் செய்தனர், ஒன்று படப்பிடிப்பின் போது அடுத்து பாடல் பதிவு செய்யும் கலையத்தில். இந்த முறை 1953 ஆம் ஆண்டு வரை நடப்பில் இருந்தது.
இந்தியாவில் பிரபலமான பின்னணிப் பாடகர்கள் நடிகர்கள் மற்றும் இசை இயக்குனர்கள் போன்று மிகவும் பிரபலமாகவும் மற்றும் புகழின் உச்சத்தில் இருந்தனர்.[1][2][3] முகமது ரபி மற்றும் அகமது ருஷ்டி[4] ஆகியோர் தெற்காசியாவில் மிகவும் செல்வாக்கு மிக்க பின்னணிப் பாடகர்களில் இருவராக கருதப்பட்டனர்.[5] முக்கியமாக இந்தித் திரைப்படங்களில் பணியாற்றிய சகோதரிகளான லதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போஸ்லே ஆகியோர் பெரும்பாலும் இந்தியாவில் பிரபலமான மற்றும் வளமான பின்னணிப் பாடகர்களில் இருவர் என்று குறிப்பிடப்படுகின்றது.[6][7] 2011 ஆம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் இசை வரலாற்றில் அதிக பாடல்கள் பதிவுசெய்த இசைக்கலைஞர் என்று பதிவு செய்யப்பட்டனர்.[8]
Seamless Wikipedia browsing. On steroids.