From Wikipedia, the free encyclopedia
நா. சீனிவாசன் என்கிற நாராயணசாமி ஸ்ரீநிவாசன் (Narayanaswami Srinivasan, பிறப்பு: சனவரி,3 ,1945)[3] ஓர் இந்திய தொழிலதிபரும் தற்போதைய பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் (ஐசிசி) தலைவரும் ஆவார். தென்னிந்தியாவிலேயே மிகுதியான அளவில் சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனம் இந்தியா சிமெண்ட்ஸ். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை நிறுவியவர் இவரது தந்தையும் பிரபல தொழிலதிபருமான டி.எஸ்.நாராயணசாமி. சங்கர் சிமெண்ட், கோரமண்டல் சிமெண்ட், ராசி சிமெண்ட் என்ற வர்த்தகப் பெயர்களில் இந் நிறுவனத்தின் சிமெண்ட் விற்பனை ஆகிறது. இந்த இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராகப் பொறுப்பாற்றுகிறார். ஐசிசியின் தலைவராவப் பொறுப்பேற்பதற்கு முன்னர் பிசிசிஐ-ன் தலைவராகவும், தமிழ்நாடு துடுப்பாட்ட வாரியத்தின் தலைவராகவும் பொறுப்பிலிருந்தார்.
நா. சிறீனிவாசன் | |
---|---|
பிறப்பு | 3 சனவரி 1945 |
இருப்பிடம் | சென்னை |
தேசியம் | இந்தியர் |
கல்வி | அறிவியல் இளங்கலை, முதுகலை பட்டயம் |
படித்த கல்வி நிறுவனங்கள் | சென்னைப் பல்கலைக்கழகம், இல்லினாய் தொழில்நுட்பக் கழகம் |
பணி | இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர். |
பட்டம் | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் தலைவர் |
பதவிக்காலம் | 2011-மே 2013 |
முன்னிருந்தவர் | சசாங்க் மனோகர் |
பின்வந்தவர் | நடப்பில்; சூன் 2013 முதல் ஜக்மோகன் டால்மியா இடைக்காலப் பொறுப்பு[1] |
பெற்றோர் | டி. எஸ். நாராயணசாமி |
வாழ்க்கைத் துணை | சித்ரா |
பிள்ளைகள் | அசுவின், ரூபா [2] |
சீனிவாசன் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் பிறந்தார்.[4] இவரது தந்தை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முதல் ஊழியர்களில் ஒருவரான டி.எஸ்.நாராயணசாமியின் ஆவார். சீனிவாசன் தனது பள்ளிப்படிப்பை மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பயின்றார்.[5] சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டமும், அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் வேதியியல் பொறியியலில் முதுகலை அறிவியல் பட்டமும் பெற்றுள்ளார்.[6]
Seamless Wikipedia browsing. On steroids.