தொட்டில் குழந்தை

எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

தொட்டில் குழந்தை

தொட்டில் குழந்தை (Thottil Kuzhanthai) 1995 இல் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். ராம்கி, ரஞ்சிதா ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்க அவர்களுடன் ஆனந்தராஜ், சனகராஜ், வினு சக்கரவர்தி, கோவை சரளா, வடிவுக்கரசி, விவேக் மற்றும் கரன் ஆகியோர் இணைகதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். வே.வடுகநாதன் மேலும் வலம்புரி முத்து ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தனர். ஆதித்தியன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தின் இசை பிப்ரவரி 24, 1995 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் வசூல் ரீதியாகத் தோல்வியடைந்ததாகக் கருதப்படுகிறது.[1]

விரைவான உண்மைகள் தொட்டில் குழந்தை, இயக்கம் ...
தொட்டில் குழந்தை
Thumb
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புவே. வடுகநாதன்
வலம்புரி முத்து
கதைபஞ்சு அருணாசலம்
இசைஆதித்தியன்
நடிப்பு
ஒளிப்பதிவுரீ.எஸ்.வினாயகம்
படத்தொகுப்புஆர். விற்றால்
கலையகம்மீனா மூவிஸ்
வெளியீடுபெப்ரவரி 24, 1995 (1995-02-24)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மூடு

கதைச்சுருக்கம்

கதையின் ஆரம்பத்திலேயே பிறந்த குழந்தை ஒன்று அரச காப்பகத்தில் விடப்படுகிறது. பின்னர் அக் குழந்தை புத்திசாலி பெண்ணாக வளர்கின்றது. அக் குழந்தையின் பெயர் ராணி (ரஞ்சிதா). ராணி புகழ்பெற்ற கல்லூரி ஒன்றில் சேருகின்றாள். பின்னர் அவள் கிராமத்து பையனான பிச்சையை (ராம்கி) சந்திக்க நேரிடுகிறது. ராணி அவனை நகரவாசிகள் போல மாற்றுகின்றாள். காலம் செல்லச் செல்ல இருவரும் நட்பு கொள்கின்றனர். படிப்பின் இறுதியில் ராணி சப்-இன்ஸ்பெக்டராகவும், பிச்சை மாவட்ட ஆட்சியராகவும் ஆகின்றனர்.அதன்பின்னர் பிரபல கடத்தல் காரனான ராஜரத்தினம் (ஆனந்தராஜ்) மற்றும் அவனது மகனான முரளி (கரண்) ஆகியோரை முகம்கொள்ள நேரிடுகிறது. கதையின் இறுதி இவர்களுக்குள் நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டது.

நடிகர்கள்

இசை

இத்திரைப்படத்திற்கு ஆதித்தியன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் இசை 1995 ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்பட பாடல்களை பஞ்சு அருணாசலம் எழுதியுள்ளார்.[2][3][4]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.