From Wikipedia, the free encyclopedia
ஈழப் போராட்டம் என்பது இலங்கையில் தமிழர்களின் தன்னாட்சி, மரவுவழித் தாயகம் உட்பட்ட மனித, குடிசார், அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகளை முன்வைத்து ஈழத் தமிழர்கள் முன்னெடுத்துவரும் போராட்டங்களைக் குறிக்கும். இலங்கையின் ஆட்சி அதிகாரம் பிரித்தானியாவிடம் இருந்து இலங்கையர்களுக்கு கையளிக்கப்பட்டது தொடக்கம் இப் போராட்டம் இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சி அமைத்து வந்த சிங்களப் பெரும்பான்மை அரசுகளுக்கு எதிராக ஈழத் தமிழர்களின் பல்வேறு அரசியல் தலைமைகளால் முன்னெடுத்து வரப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஈழப் போராட்ட காரணங்கள் |
---|
இலங்கையில் ஆட்சி அமைத்த சிங்களப் பெரும்பான்மை அரசுகள் தொடர்ச்சியாக கொண்டுவந்த இனவாத அடக்குமுறை சட்டங்கள், நடைமுறைகள், வன்முறைகள், இனப்படுகொலை ஆகியன இப் போராட்டத்தின் அடிக் காரணிகளாக அமைகின்றன. 1980 களில் இருந்து 2009 வரை இப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக பல்வேறு இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்டது. இவ்வியக்கங்களின் கடைசி ஆயுதப் போராட்ட இயக்கமாக இருந்த விடுதலைப் புலிகள் 2009 இல் அழிக்கப்பட்ட பின்னர் இப் போராட்டம் மீண்டும் முழுமையான அரசியல் போராட்டமாக மாறி உள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.