இளவாலை
இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia
இளவாலை (Ilavalai) யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமப் பிரிவில், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவிலும், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிலும், உள்ள ஒரு ஊர் ஆகும். யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்குக் கரையோரமாக அமைந்துள்ள இவ்வூரின் வடக்கு எல்லையில் கடலும், கிழக்கு எல்லையில் நகுலேஸ்வரம், கொல்லங்கலட்டி, பன்னாலை, வித்தகபுரம் ஆகிய ஊர்களும், தெற்கில் முள்ளானையும், மேற்கில் மாரீசன்கூடலும் உள்ளன. இவ்வூர் இளவாலை, இளவாலை வடக்கு, இளவாலை வடமேற்கு என மூன்று கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1][2][3][4] யாழ்ப்பாண நகரில் இருந்து 18 கிமீ வடக்கே இளவாலை அமைந்துள்ளது.
இளவாலை | |
---|---|
கிராமம் | |
வட மாகாணத்தில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 9°47′42″N 79°59′34″E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வடக்கு |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
பி.செ. பிரிவு | வலிகாமம் வடக்கு |
அரசு | |
• வகை | பிரதேச செயலகம் |
• நிர்வாகம் | வலிகாமம் வடக்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்) |
தொலைபேசிக் குறியீடு | 021 |
வாகனப் பதிவு | NP |
இளவாலையில் பிறந்து புகழ் பெற்றவர்கள்
- சந்தியாப்பிள்ளை யேசுரத்தினம், வானொலிக் கலைஞர்
- அமுதுப் புலவர்
- நீ. மரிய சேவியர்
- பி. எஸ். எம். சார்லசு
இங்குள்ள பாடசாலைகள்
- மெய்கண்டான் மகா வித்தியாலயம்
- இளவாலை கன்னியர்மடம் மகாவித்தியாலயம்
- புனித ஹென்றியரசர் கல்லூரி
- றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை
இங்குள்ள இறைத்தலங்கள்
- ஆனைவிழுந்தான் விக்ன விநாயகர் ஆலயம்[7]
- ஒல்லுடை ஞானவைரவர் ஆலயம்
- நாதோலை முத்துமாரி அம்மன் ஆலயம்
- நாவலடி வைரவர் ஆலயம்
- இளவாலை வடக்கு இலுப்பையடி ஞானவைரவர் ஆலயம்
- மணலடைப்பு அண்ணமகேஸ்வரர் ஆலயம்[8][9]
- பேச்சி அம்மன் ஆலயம்
- வசந்தபுரம் கூட்டத்தார் ஆலயம்[9]
- புனித அன்னாள் ஆலயம்
- புனித யாகப்பர் ஆலயம்
- வாழ்வகம் மடுமாதா ஆலயம்
- புனித யூதா ததேயு ஆலயம்
- புனித றீற்றன்னை பங்குத்தளம்
- பத்தாவத்தை புனித பிலிப்பு நேரியார் ஆலயம்
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.