![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a0/Kashmir_map.svg/langta-640px-Kashmir_map.svg.png&w=640&q=50)
2019 பாலாகோட் வான் தாக்குதல்
From Wikipedia, the free encyclopedia
2019 பாலகோட் வான் தாக்குதல் (2019 Balakot airstrike) பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜெய்ஸ்-இ-முகமது இயக்கத் தீவிரவாதிகளால், புல்வாமா தாக்குதலில், 14 பிப்ரவரி 2019 அன்று 40 மத்திய சேமக் காவல் படையினர் உயிர் நீத்தனர். எனவே பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு, இந்தியா மீது அடிக்கடி தாக்குதல் நடத்தும் தீவிரவாத இயக்க முகாம்களை அழிக்கும் நோக்கத்துடன், 26 பிப்ரவரி 2019 அன்று அதிகாலை 3.30 மணி அளவில் இந்திய விமானப் படையின் 12 மிராஜ் 2000 போர் விமானங்கள், காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டு கோட்டைத் தாண்டி, கைபர் பக்துன்வா மாகாணத்தின் பாலகோட் மற்றும் முசாஃபராபாத் நகரங்களில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது குண்டுகள் வீசித் தாக்கி அழித்தனர்.[4]
2019 பாலகோட் வான்தாக்குதல் | ||||||
---|---|---|---|---|---|---|
இந்திய-பாகிஸ்தான் பிணக்குகள் காஷ்மீர் பிரச்சினை பகுதி |
||||||
![]() ஜம்மு காஷ்மீர் வரைபடம் |
||||||
|
||||||
பிரிவினர் | ||||||
![]() | ![]() | ![]()
|
||||
தளபதிகள், தலைவர்கள் | ||||||
அறியப்படவில்லை | ||||||
படைப் பிரிவுகள் | ||||||
அறியப்படவில்லை | ||||||
பலம் | ||||||
12 மிராஜ் 2000 போர் விமானங்கள் | ||||||
இழப்புகள் | ||||||
இறப்பு 200-300 (இந்தியாவின் கூற்று)[3] ஒன்றுமில்லை (பாகிஸ்தானின் கூற்று) |
இத்தாக்குதலில் பாலகோட் நகரத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த ஜெய்ஸ் இ முகமது இயக்கத்தின் தீவிரவாதிகள் 200 முதல் 300 பேர் வரை பலியாகியுள்ளதாக ஊடகங்கள் கூறுகிறது. [5][6][7] [8]
பாகிஸ்தானின் அறிக்கைகளின் படி, இந்தியாவின் போர் விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, விரட்டியடிக்கப்பட்டது எனக் கூறுகிறது. இந்தியப் போர் விமானாங்களின் தாக்குதல்களால் தங்களுக்கு இழப்பு ஏதும் இல்லை என்றும் கூறுகிறது.[9][10]