2017 ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணம்
From Wikipedia, the free encyclopedia
2017 ஐசிசி வாகையாளர் கோப்பை (2017 ICC Champions Trophy, 2017 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி) என்பது இங்கிலாந்து மற்றும் வேல்சில் உள்ள அரங்குகளில் 2017 சூன் 1 முதல் 18 வரை 8 துடுப்பாட்ட அணிகளுக்கிடையே நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுப் போட்டித் தொடராகும்.[1] இப்போட்டித் தொடரில் பாக்கித்தான் அணி முதற்தடவையாக வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இறுதிப் போட்டியில் இவ்வணி இந்திய அணியை 180-ஓட்டங்களால் வென்றது.[2][3]
நாட்கள் | 1 சூன் – 18 சூன் 2017 |
---|---|
நிர்வாகி(கள்) | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
துடுப்பாட்ட வடிவம் | ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் |
போட்டித் தொடர் வடிவம் | சுழல்முறை, ஒற்றை வெளியேற்றம் |
நடத்துனர்(கள்) | ![]() ![]() |
வாகையாளர் | ![]() |
இரண்டாமவர் | ![]() |
மொத்த பங்கேற்பாளர்கள் | 8 |
மொத்த போட்டிகள் | 15 |
தொடர் நாயகன் | ![]() |
அதிக ஓட்டங்கள் | ![]() |
அதிக வீழ்த்தல்கள் | ![]() |
அலுவல்முறை வலைத்தளம் | ஐசிசி வாகையாளர் கோப்பை |
← 2013 2021 → |
இவ்வகையிலான போட்டிகளில் இது எட்டாவது போட்டியாகும். ஐசிசி துடுப்பாட்ட தரவரிசையில் 2015 செப்டம்பர் 30 இல் முதல் எட்டு இடங்களை பிடித்த அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து இதில் பங்குபெற்றியிருந்தன். ஒவ்வொரு குழுவிலும் நான்கு அணிகள் விளையாடின. வங்காளதேசம் இந்த முறை மேற்கிந்திய அணிக்குப் பதிலாக விளையாடும் வாய்ப்பைப் பெற்றது. வங்காளதேச அணி 1006 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதல் முறையாக இத்தொடரில் விளையாட வாய்ப்புப் பெற்றது. அதேசமயம் மேற்கிந்திய அணி முதற்தடவையாக விளையாடும் வாய்ப்பை இழந்தது.
மான்செஸ்டரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பை அடுத்து அங்கு மிகப்பலமான பாதுகாப்பு வழங்கப்பட்டது.[4][5]