2016 ஊரித் தாக்குதல்
From Wikipedia, the free encyclopedia
2016 ஊரித் தாக்குதல் ( 2016 Uri attack) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்த, யூரி நகரத்தின் அருகே, 4 பாகிஸ்தானிய இசுலாமிய தீவிரவாதிகளால், 18 செப்டம் 2016 அன்று இந்திய எல்லைப் பாதுகாப்பு படை முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஆகும்..[9] ஊரித் தாக்குதலில் இந்தியாவின் 19 இந்திய எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களும்; 4 பாகிஸ்தான் இசுலாமியத் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத இயக்கங்களான ஜெய்ஸ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-ஏ-தொய்பா ஆகியவைகளுக்கு தொடர்பு இருக்கலாம் என கருதப்படுகிறது.[6] இத்தாக்குதலுக்குப் பின் காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவது மிகவும் பதட்டமான சூழ்நிலை நிலவியது.[10][11]
விரைவான உண்மைகள் இடம், நாள் ...
2016 ஊரித் தாக்குதல் | |
---|---|
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் | |
Location in Jammu and Kashmir, India | |
இடம் | யூரி அருகில், பாரமுல்லா மாவட்டம்]], ஜம்மு காஷ்மீர், இந்தியா |
நாள் | 18 செப்டம்பர் 2016 5.30 am (இந்திய சீர் நேரம்) |
தாக்குதல் வகை | தீவிரவாதம் |
ஆயுதம் | 4 ஏகே-47 துப்பாக்கிகள், 4 கையெறிகுண்டு எவுகணைகள், 14 கையெறி குண்டுகள்[1] |
இறப்பு(கள்) | 23 (19 படைவீரர்கள், 4 தீவிரவாதிகள்)[2][3] |
காயமடைந்தோர் | 19–30[4][5] |
தாக்கியதாக சந்தேகிக்கப்படுவோர் | ஜெய்ஸ்-இ-முகமது[6] லஷ்கர்-ஏ-தொய்பா[7] |
எதிர்த்தோர் | இந்தியத் தரைப்படைவின் 4 வது சிறப்பு அதிரடிப் படைப்பிரிவு[8] |
மூடு