2006 வாரணாசி குண்டுவெடிப்புகள்
From Wikipedia, the free encyclopedia
7 மார்ச் 2006 அன்று இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்துக்களின் புனித தலமான வாரணாசியில் உள்ள அனுமார் கோயில் மற்றும் வாரணாசி கண்டோன்மெண்ட் இரயில் நிலையத்தில் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தினர் நடத்திய தொடர் குண்டு வெடிப்புகளில் 28 இந்துக்கள் உயிரிழந்தனர் மற்றும் 101 பேர் படுகாயம் அடைந்தனர்.[1] இந்த குண்டு வெடிப்புகளுக்கு லஷ்கர்-ஏ-தொய்பா பொறுப்பு ஏற்றது.[2]
விரைவான உண்மைகள் நிகழ்விடம், நாள் ...
2006 வாரணாசி குண்டு வெடிப்புகள் | |
---|---|
நிகழ்விடம் | வாரணாசி, உத்தரப் பிரதேசம், இந்தியா |
நாள் | 7 மார்ச் 2006 18:20 இந்திய சீர் நேரம் (UTC+05:30) |
இலக்கு | அனுமார் கோயில் மற்றும் வாரணாசி கண்டோன்மெண்ட் இரயில் நிலையம் |
தாக்குதல் வகை | வெடி குண்டுகள் |
இறப்பு(கள்) | 28 |
காயமடைந்தவர் | 101 |
Perpetrator(s) | லஷ்கர்-ஏ-தொய்பா |
மூடு