1972 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
From Wikipedia, the free encyclopedia
1972 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் முனிச் நகரில் ஆகத்து 26 முதல் செப்தெம்பர் 11 வரை 1972ம் ஆண்டு நடந்த கோடைக்கால ஒலிம்பாகும். இது XX ஒலிம்பியாட் என அழைக்கப்படுகிறது. இது மேற்கு செருமனியின் முனிச் நகரத்தில் நடக்கும் இரண்டாவது ஒலிம்பிக்காகும். முதல் ஒலிம்பிக் 1932ம் ஆண்டு பெர்லின் நகரில் நடந்தது.
இப்போட்டி முனிச் படுகொலையால் பாதிக்கப்பட்டது. இப்படுகொலையில் 11 இசுரேலிய வீரர்களும் பயிற்சியாளர்களும் காவல்துறையினரும் ஐந்து தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளில் மூவர் உயிருடன் பிடிபட்டனர்.[1]
பதினொரு நாடுகள் முதன்முறையாக முனிச் ஒலிம்பிக்கின் போது பங்கு கொண்டன. அவை அல்பேனியா, சவுதி அரேபியா, சோமாலியா, வட கொரியா, டாகோமெ (தற்போது பெனின்), காபோன், புர்க்கினா பாசோ, டோகோ, மலாவி, லெசோத்தோ, சுவாசிலாந்து. பங்குபெற்ற நாடுகள் செருமன் எழுத்து முறைப்படி வந்தன அதனால் எகிப்து முதலில் வந்தது.