1962 இலங்கை ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி
From Wikipedia, the free encyclopedia
1962 இலங்கை ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி (Ceylonese coup d'état attempt, அல்லது Colonels coup) என்பது இலங்கையில் 1962 சனவரி 27 இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு தோல்வியடைந்த இராணுவப் புரட்சியைக் குறிக்கும். கிறித்தவ உயர்குடி மூத்த இராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகள் சிலர் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான சனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வன்முறை மூலம் கவிழ்க்கத் திட்டமிட்டனர்.[1] 1962 சனவரி 27 இரவு புரட்சி முன்னெடுக்கப்படும் முன்னரேயே முக்கிய கிளர்ச்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.[2][3][4][5]