விஸ்வ பாரதி கல்வியியல் கல்லூரி
From Wikipedia, the free encyclopedia
விஸ்வ பாரதி கல்வியியல் கல்லூரி என்பது காசுமீரின் சிறிநகரில் உள்ள ரெய்னாவாரியில் தால் ஏரியின் உப்பங்கழியில் 1980 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு கல்வியியல் கல்லூரியாகும். 2009 ஆம் ஆண்டு வரை பெண்கள் மட்டுமே பயிலும் கல்லூரியாக இருந்த இது, ஆசிரியர் கல்வியின் வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்ய ஆண்களையும் சேர்த்துக் கொள்ள காசுமீர் பல்கலைக்கழகத்தால் அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது இருபாலரும் பயிலும் கல்வி நிறுவனமாக இயங்கிவருகிறது.[1]
விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
வகை | தனியார் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1980; 44 ஆண்டுகளுக்கு முன்னர் (1980) |
சார்பு | காசுமீர் பல்கலைக்கழகம் |
தரநிர்ணயம் | தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை |
தலைவர் | முனைவர் எஸ்.கே. கவுல் |
முதல்வர் | பேராசிரியர் பாரதி பட் |
அமைவிடம் | அகல்பூர் மோர் , , 180018 , 32°44′52″N 74°48′01″E |
வளாகம் | நகர்ப்புறம் |
மொழி | உருது, இந்தி, ஆங்கிலம், காசுமீரி |
இணையதளம் | கல்லூரி இணையதளம் |
மூடு
காசுமீர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள[2] இந்த கல்லூரி அப்பள்ளத்தாக்கில் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக 1990 ஆம் ஆண்டில் காஷ்மீரில் இருந்து மாற்றப்பட்டு, தற்போது ஜம்முவின் அகல்பூர் மோர் என்ற இடத்தில் இயங்கிவருகிறது.