வித்தல் சுந்தர்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
வித்தல் சுந்தர் (Vitthal Sundar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். விட்டல் சுந்தர் பரசுராமி, விட்டல் சுந்தர் என்ற பெயர்களாலும் இவர் அறியப்படுகிறார். நிசாம் அலி கான் (இரண்டாம் ஆசாஃப் சா) ஆட்சியின் போது ஐதராபாத்தின் பிரதமராக இவர் இருந்தார். 1762 ஆம் ஆண்டு சூலை மாதம் 8 ஆம் தேதி தக்காணத்தின் சுபேதாராக கான் நியமிக்கப்பட்டபோது, அவர் உடனடியாக சுந்தரை தனது திவானாக நியமித்து அவருக்கு இ'ராசா பிரதாபவந்து என்ற பட்டத்தை வழங்கினார்.[1] விட்டல் சுந்தர் மகாராட்டிராவின் தேசாசுத்தா பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்.[2][3][4][5] 1763 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 10 ஆம் தேதியன்று இரக்சாபுவன் போரின் போது விட்டல் சுந்தர் நிசாமின் தளபதியாக இருந்தார். 1763 ஆம் ஆண்டில் நடைபெற்ற இப்போரில் வித்தல் சுந்தர் ஆகத்து மாதம் 10 ஆம் தேதியன்று கொல்லப்பட்டார்.[6]
விரைவான உண்மைகள் வித்தல் சுந்தர் பரசுராமி, ஐதராபாத்து பிரதம மந்திரி ...
வித்தல் சுந்தர் பரசுராமி | |
---|---|
இராசா பிரதாப்வந்து பகதூர் | |
விட்டல் சுந்தர் பரசுராமியின் சமாதி (இறந்தவர்களை நினைவுகூரும் நினைவுச்சின்னம்). | |
ஐதராபாத்து பிரதம மந்திரி | |
ஆட்சிக்காலம் | 8 சூலை 1762 – 10 ஆகத்து 1763 |
முன்னையவர் | பசால்ட்டு இயங்கு |
பின்னையவர் | மூசா கான் நவாப் ருகன் உத்-தௌலா |
இறப்பு | 10 ஆகத்து 1763 இரக்சாசுபுவன் (தற்பொழுது பீடு மாவட்டம், மகாராட்டிரம்) |
தந்தை | சுந்தர் நாராயன் பரசுராமி |
மூடு