![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a1/Chola_flag.png/640px-Chola_flag.png&w=640&q=50)
வல்லவரையன் வந்தியத்தேவன்
சோழ நாட்டு படைத் தளபதி / From Wikipedia, the free encyclopedia
இக்கட்டுரை சோழக் குறுநில மன்னர் பற்றியது. பொன்னியின் செல்வன் கதைமாந்தர் மாந்தர் பற்றிய கட்டுரைக்கு வந்தியத் தேவன் (கதைமாந்தர்) ஐப் பார்க்க.
வல்லவரையன் வந்தியத்தேவன் சோழப் பேரரசின் கீழ் "வல்லவரையர் நாடு" என்ற சொல்லப்பட்ட பிரம்மதேசத்தை சுற்றியிருந்த சிறுநாட்டு மன்னர் ஆவார். முதலாம் இராசராசன் மற்றும் முதலாம் இராசேந்திரனின் படைகளின் மாதண்ட நாயக்கராக இருந்தவர்.[1] முதலாம் இராசராசனின் தமக்கையான குந்தவை பிராட்டியின் கணவரும் ஆவார். அப்போதைய வட ஆற்காடு மாவட்டத்தில் (தற்போது வேலூர்) பிரமதேசம் எனும் பகுதியினை அரசாண்டவர்.[2] சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதி வல்லவரையர் நாடு என வழங்கப்பட்டது.[3]
மற்ற குறுநிலமன்னர்களை சிறைப் பிடித்து, மன்னர்களின் பொருள்களை புலவர்களுக்கு பரிசு அளித்து வந்தனர்.[4] இவரின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதி வல்லவரையர் நாடு என்றழைக்கப்பட்டது. வந்தியத்தேவனைப் பல்வேறு வரலாற்றுப் புதின ஆசிரியர்கள் பலமிக்க சேனைத்தலைவானகவே தம் புதினங்களில் விவரித்துள்ளனர்.