வரணி
இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள கிராமம் / From Wikipedia, the free encyclopedia
வரணி[2] (Varany) இலங்கையின் வட மாகாணத்தின் யாழ்ப்பாணக் குடாநாட்டில், யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரிவில், சாவகச்சேரிப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட ஊர். முன்னர் வரணியில் வாழ்ந்த மக்கள் பயிர்த்தொழிலில் தமது அதிக கவனத்தைச் செலுத்தியிருந்தமையால், கல்வித்துறையில் முன்னேறுவது பற்றி அதிகம் சிந்திக்காமல் இருந்து வந்தனர். அதனால் அங்கு பெரிய பாடசாலைகள் உருவாகவில்லை. கல்வியில் அதிக கவனம் செலுத்தியவர்கள் பொதுவாக பேருந்திலோ அல்லது தொடருந்திலோ சாவகச்சேரி அல்லது யாழ்ப்பாணம் போன்ற இடங்களுக்கு நாளும் பயணம் செய்து தமது கல்வியைப் பெற்று வந்தனர். இங்கு மிகவும் புகழ் பெற்ற சுட்டிபுரம் அம்மன் கோவில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் வரணி, ;qod ...
வரணி | |
---|---|
ஆள்கூறுகள்: 9°45′N 80°13′E | |
;qod | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (India Standard Time[1]) |
மூடு