வட்டார இணைப்புத் திட்டம் - உடான்
பரவலான வான்பயணம் / From Wikipedia, the free encyclopedia
வட்டார இணைப்புத் திட்டம் (Regional Connectivity Scheme) அல்லது உதான் (UDAN - Ude Desh ka Aam Naagrik, UDAN-RCS இந்திய அரசின் வட்டார வானூர்தி நிலையங்களின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்குமானத் திட்டமாகும். இதன் நோக்கமாக "நாட்டின் பொதுக் குடிமகன் பறந்திடுக" எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது; இதன்மூலம் வான்பயணம் பரவலாகவும் அனைவருக்கும் தாங்கத் தக்கதாகவும் இருக்கும். தவிரவும் தேசியப் பொருளியல் மேம்பாட்டிற்கும், வேலைவாய்ப்பிற்கும் இந்தியாவின் அனைத்து வட்டாரங்களிலும் மாநிலங்களிலும் வான் போக்குவரத்து கட்டமைப்பு மேம்படவும் வழிகோலும்.[1][3] இந்தத் திட்டத்தின் துவக்கத்தின்போது 486 வானூர்தி நிலையங்களில், 406 பயன்படுத்தப்படாத நிலையங்களாக இருந்தன.[4] இந்தியாவிலுள்ள பயன்படுத்தப்படாத அல்லது குறைவாக பயன்படுத்தப்படும் மேம்படுத்தப்படாத 425 வானூர்தி நிலையங்களில் வட்டார வானூர்தி நிலையங்களை மேம்படுத்தியும் இயக்கத்திற்கு கொணர்ந்தும் இத்திட்டம் வான்பயணத்தை ஊக்குவிக்கும்.[5]
"உடே தேஷ் கா ஆம் நாகரிக் (உதான்)" வட்டார இணைப்புத் திட்டம் (UDAN-RCS) | |
---|---|
இந்திய வானூர்தி நிலையங்களும் துறைமுகங்களும் (நிறைவுறாப் பட்டியல்) | |
Motto | உடே தேஷ் கா ஆம் நாகரிக் (நாட்டின் பொதுக் குடிமகன் பறந்திடுக.) |
திட்ட வகை | அரசின் வட்டார வானூர்தி நிலையங்களையும் வான்வழித்தடங்களையும் மேம்படுத்தும் திட்டம் - உச்சம்கட்டுப்படுத்திய பயணக்கட்டணங்களும் இலாபமற்ற வழித்தடங்களுக்கு அரசு மானியமும் |
நாடு | இந்தியா |
பிரதமர் | நரேந்திர மோதி |
Ministry | இந்தியக் குடிசார் வான்பயண அமைச்சகம்[1] |
Key people | அசோக் கஜபதி ராஜு |
துவங்கியது | 27 ஏப்ரல் 2017; 7 ஆண்டுகள் முன்னர் (2017-04-27) தில்லி |
Budget | ₹45,000 மில்லியன் (2020 இல் நிகர மதிப்பு ₹47 billion, US$590 மில்லியன் அல்லது €580 மில்லியன்) முதல் 50 வட்டார வானூர்தி நிலையங்களுக்கான நிதி ஒதுக்கீடு. [2] முதன்மை வழித்தடங்களில் இத்திட்டத்திற்காக ஒவ்வொரு பயணத்திற்கும் INR5000 (இருக்கை ஒன்றுக்கு INR30) வசூலிக்கப்படும் |
இணையத்தளம் | www |