ரோனு புயல்
From Wikipedia, the free encyclopedia
ரோனு புயல் (Cyclonic Storm Roanu) வங்காள விரிகுடாவில் செயற்பாட்டில் உள்ள வெப்ப மண்டலச் சூறாவளி ஆகும். இது இந்தியாவின் கிழக்குக் கடற்கரை மற்றும் இலங்கை கடற்கரையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 2016ஆண்டின் சூறாவளிப் பருவத்தின் முதல் புயலாக இது உள்ளது. ரோனு இலங்கையின் தென்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகத் தொடங்கியது. வடக்கு நோக்கி நகர்ந்து இது மே 19இல் புயலாக மாறியது; தரைபகுதியைக் கடந்ததால் இது வலிவிழந்தது. ஆனால் மீண்டும் வலிவுற்று வங்காளதேச கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகின்றது.
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். |
சூறாவளிப் புயல் (இ.வா.து. அளவு) | |
---|---|
Tropical storm (JTWC scale) | |
Cyclone Roanu during peak intensity on 19 May | |
தொடக்கம் | 17 மே 2016 |
மறைவு | Currently active |
(Remnant low after 22 May) | |
உயர் காற்று | 3-நிமிட நீடிப்பு: 85 கிமீ/ம (50 mph) 1-நிமிட நீடிப்பு: 100 கிமீ/ம (65 mph) |
தாழ் அமுக்கம் | 983 hPa (பார்); 29.03 inHg |
இறப்புகள் | 95 total, 132 missing |
சேதம் | Moderate $ |
பாதிப்புப் பகுதிகள் | வங்காளதேசம், மியான்மர், East coast of India, இலங்கை |
2016 North Indian Ocean cyclone season-இன் ஒரு பகுதி | |
ரோனு புயலால் இலங்கையில் குறைந்தது 71 பேர் உயிரிழந்துள்ளனர்; வங்காளதேசத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். ரோனு புயலால் இந்தியாவின் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மாநிலங்களில் கனமழை பெய்துள்ளது. இது கடற்கரையோரமாகவே வடகிழக்கு திசையில் நகர்ந்து வருகின்றது; வங்காளதேசத்தின் கடற்கரையில் நிலப்பகுதியை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.