ருக்கையா சுல்தான் பேகம்
முகலாயப் பேரரசர் அக்பரின் மனைவி / From Wikipedia, the free encyclopedia
ருக்கையா சுல்தான் பேகம் (Ruqaiya Sultan Begum;1542கள் – 19 சனவரி 1626) 1557 முதல் 1605 வரை முகலாயப் பேரரசின் பேரரசியாக இருந்தார்.[2] இவர் மூன்றாவது முகலாயப் பேரரசர் அக்பரின்[3] [4] [5] பேரரசியாக கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் அரசியாக இருந்தார்.
ருக்கையா சுல்தான் பேகம் | |
---|---|
முகலாயப் பேரரசின் ஷா Zan-i-Kalan | |
பாத்ஷா பேகம் | |
ஆட்சிக்காலம் | 1557கள் – 1605 |
முன்னையவர் | பேகா பேகம் |
பின்னையவர் | சாலிகா பானு பேகம் |
பிறப்பு | 1542கள் |
இறப்பு | 19 சனவரி 1626(1626-01-19) (அகவை 83–84)[1] ஆக்ரா, முகலாயப் பேரரசு |
புதைத்த இடம் | |
துணைவர் | அக்பர் |
மரபு | தைமூர் (பிறப்பால்) |
தந்தை | கிந்தால் மிசா |
தாய் | சுல்தானா பேகம் |
மதம் | சுன்னி இசுலாம் |
ருக்கையா, பிறப்பால் முகலாய இளவரசியாவார். இவருடைய தந்தை கிந்தால் மிர்சா அக்பரின் தந்தை நசிருதீன் உமாயூனின் இளைய சகோதரர் ஆவார். இவருக்கு இவரது ஒன்பது வயதில் அக்பருடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு 14 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஆனால் தனது காலம் முழுவதும் குழந்தைகள் இல்லாமல் இருந்தார். பிற்கால வாழ்க்கையில், இவர் அக்பரின் விருப்பமான பேரன் குர்ரமை (வருங்கால பேரரசர் ஷாஜகான் ) வளர்த்தார் (கிட்டத்தட்ட தத்தெடுத்தார்). அக்பரின் தலைமை மனைவியாக, இவர் அக்பரின் மீது கணிசமான செல்வாக்கைக் கொண்டிருந்தார். மேலும், 1600களின் முற்பகுதியில் முகலாயரின் சிம்மாசனத்தில் ஜஹாங்கீரின் சேர்க்கை தொடர்பாக தந்தை-மகன் உறவு மோசமாக மாறியபோது, தனது கணவருக்கும் ஜஹாங்கீருக்கும் இடையே ஒரு சமரச பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்தார். இறுதியில் முகலாயர் சிம்மாசனத்தில் ஜஹாங்கீர் சேர வழிவகை செய்ய உதவியது. இவரது வளர்ப்பு மகன் ஷாஜகான் சகோதரத்துவ போராட்டத்திற்குப் பிறகு அரியணை ஏறுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே இவர் இறந்துவிட்டார்.