மோங்குத்
From Wikipedia, the free encyclopedia
பேரரசர் மோங்குத் (Mongkut The Great) (அரசர் நான்காம் ராமா) என்றும் அழைக்கப்படும் (ஆட்சிப் பெயர் ப்ரா சோம் கிளாவ் சாவோ யூ ஹுவா) [lower-alpha 1] (18 அக்டோபர் 1804 – 1 அக்டோபர் 1868), இவர் சக்ரி வம்சம் கீழ் சியாமை (தாய்லாந்து) ஆண்ட நான்காவது மன்னராவார். இவர் 1851 முதல் 1868 வரை ஆட்சி செய்தார். (மோங்குத் என்பதன், துல்லியமான பொருள்: கிரீடம்)
மோங்குத் | |
---|---|
மன்னர் நான்காம் ராமா | |
சியாமின் அரசன் | |
ஆட்சிக்காலம் | 2 ஏப்ரல் 1851 – 1 அக்டோபர் 1868 |
வாரிசுரிமை | 15 மே 1851 |
முன்னையவர் | மூன்றாம் ராமா |
பின்னையவர் | சுலலாங்கொர்ன் (ஐந்தாம் ரமா) |
ஆளுநர் | பிங்களாவ் |
பிறப்பு | (1804-10-18)18 அக்டோபர் 1804 தோன்பூரி அரண்மனை, பாங்காக் யாய், பேங்காக், தாய்லாந்து |
இறப்பு | 1 அக்டோபர் 1868(1868-10-01) (அகவை 63) பெரிய அரண்மனை, தாய்லாந்து, பிரா நகோன், பேங்காக், தாய்லாந்து |
துணைவர் | ராணி சோமனாஸ் வதனாவதி (1851) ராணி தேபசீந்திரா (1851-1861) இளவரசி பன்னரை (1861–1868) |
குழந்தைகளின் #Family | 82 மகன்களும் மகள்களும் |
மரபு | சக்ரி வம்சம் |
தந்தை | புத்த லோட்லா நபாலாய் (இரண்டாம் ராமா) |
தாய் | ச்றீ சூரியேந்திரா |
மதம் | பௌத்தம் |
கையொப்பம் |
சியாம் இவரது ஆட்சியின் போது மேற்கத்திய விரிவாக்கத்தின் அழுத்தத்தை முதலில் உணர்ந்தது. மொங்குத் மேற்கத்திய கண்டுபிடிப்புகளைத் தழுவி, தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரத்தில் தனது நாட்டின் நவீனமயமாக்கலைத் தொடங்கினார்-சியாமில் "அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் தந்தை" என்ற புனைப்பெயரையும் பெற்றார்.
இவரது1851 ஆம் ஆண்டில் அரசன் பிங்க்லாவ் என முடிசூட்டப்பட்ட தனது சகோதரர் இளவரசர் சுட்டமணியை இரண்டாவது மன்னராக நியமித்ததற்காகவும் இவர் அறியப்பட்டார். பிங்க்லாவை தனக்கு சமமான மரியாதையுடன் மதிக்க வேண்டும் என்று இவர் நாட்டிற்கு கட்டளையளித்தார் (1583 இல் மன்னர் நரேசுவான் தனது சகோதரர் ஏகதொட்சரோட்டுடன் செய்ததைப் போல). இவரது ஆட்சியின் போது , புன்னாக் குடும்பத்தின் அதிகாரம் அதன் உச்சத்தை அடைந்தது: இது சியாமின் மிக சக்திவாய்ந்த உன்னத குடும்பமாக மாறியது.