மூவார் போர்
மலேசியா மூவார் பகுதியில் 1942-ஆம் ஆண்டில் நடைபெற்ற போர் / From Wikipedia, the free encyclopedia
மூவார் போர் (ஆங்கிலம்: Battle of Muar; மலாய்: Pertempuran di Muar); என்பது இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், மலாயாவின் மீது சப்பானியர் படையெடுத்த போது, தீபகற்ப மலேசியா, ஜொகூர், மூவார் பகுதியில் 1942 சனவரி 14-ஆம் தேதியில் இருந்து 1942 சனவரி 22-ஆம் தேதி வரையில் நடைபெற்ற போரைக் குறிப்பிடுவதாகும்.
|
||||||||||||||||||||||||||||||||||
இந்தப் போர் கெமிஞ்சே பாலத்தை சுற்றிய பகுதியிலும்; மூவார் ஆற்றுப் பகுதியிலும் நடைபெற்றது. ஆஸ்திரேலிய இராணுவத்தின் 8-ஆவது தரைப்படைக்கும்; சப்பானிய இராணுவத்தின் 25-ஆவது பட்டாளத்தின் 5-ஆவது தரைப்படைக்கும் இடையே நடந்த இந்தப் போரில் ஆஸ்திரேலிய இராணுவத்திற்கு 3,100 உயிரிழப்புகள்; சப்பானிய இராணுவத்திற்கு 700-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
மிகத் தீவிரமான போர் என்று அறியப்படும் இந்தப் போரின் போது பாரிட் சூலோங் எனும் இடத்தில், காயமடைந்து சரணடைந்த 150-க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய, இந்தியப் போர்க் கைதிகளை, சப்பானிய இராணுவத்தினர் படுகொலை செய்தனர். அந்த துர்நிகழ்வு பாரிட் சூலோங் படுகொலை என அறியப்படுகிறது.