மாரி மாகாணம்
துருக்மெனிஸ்தான் மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
மேரி பிராந்தியம் ( Mary Region) என்பது துர்க்மெனிஸ்தானின் பிராந்தியங்களில் ஒன்றாகும். இது ஆப்கானித்தான் நாட்டின் எல்லையை ஒட்டி நாட்டின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் மேரி நகரம் ஆகும். மாகாணத்தின் பரப்பளவு 87,150 km2 (33,650 sq mi) மற்றும் மக்கள் தொகை 1,480,400 (2005 கணக்கு. ) என உள்ளது. [1] சராசரி மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 15 நபர்கள் என்று உள்ளது. ஆனால் இது பாலைவனச்சோலைகளில் சதுர கிலோமீட்டருக்கு 150-200 வரை இருக்கும்.
மேரி | |
---|---|
துர்க்மெனிஸ்தானில் மேரி மாகாணத்தின் அமைவிடம் | |
நாடு | துருக்மெனிஸ்தான் |
நலைநகரம் | மேரி |
பரப்பளவு | |
• மொத்தம் | 87,150 km2 (33,650 sq mi) |
மக்கள்தொகை (2005) | |
• மொத்தம் | 14,80,400 |
• அடர்த்தி | 17/km2 (44/sq mi) |
2000 ஆம் ஆண்டு கணிப்பின்படி, மேரி பிராந்தியமானது துர்க்மெனிஸ்தானின் மக்கள்தொகையில் 23%, மொத்த வேலைவாய்ப்பில் 19%, வேளாண் உற்பத்தியில் 26% (மதிப்பின்படி), நாட்டின் மொத்த தொழில்துறை உற்பத்தியில் 21% பங்கு வகிக்கிறது. [2] பிராந்தியத்தின் தொழில்களில் இயற்கை எரிவாயு பிரித்தெடுத்தல் ( அயோலோட்டன் எரிவாயு வயல் ), மின்சார உற்பத்தி, ஜவுளி, கம்பள நெசவு, ரசாயன மற்றும் உணவுத் தொழில் ஆகியவை அடங்கும். 2001 ஆம் ஆண்டில் இது துர்க்மெனிஸ்தானின் மின் உற்பத்தியில் 74% இயற்கை எரிவாயு பிரித்தெடுத்தலில் 26% நிறைவு செய்கிறது. [3]
மேரி பிராந்திய வேளாண்மையானது மாகாணத்தின் மையப்பகுதி வழியாக கிழக்கிலிருந்து மேற்காக ஓடும் காரகும் கால்வாய் மூலமாகவும், ஆப்கானிஸ்தானில் இருந்து மாகாணத்திற்குள் நுழைந்து தெற்கிலிருந்து வடக்கே ஓடும் முர்காப் நதி போன்றவற்றின் வளத்தால் நடக்கிறது. மாகாணத்தின் வடக்கு பகுதி மத்திய ஆசிய தெற்கு பாலைவன சுற்றுச்சூழலுக்குள் இருக்கும்போது, மாகாணத்தின் தெற்கு பகுதி பிஸ்தா மற்றும் பாலைவன சேடுகளின் புல்வெளிகளால் வகைப்படுத்தப்படுகிறது, இது உலக வனவிலங்கு நிதியத்தால் பாட்கிஸ்-கராபில் அரை பாலைவனம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கபட்ட பண்டைய மெர்வ், மேரி மாகாணத்தின் முக்கிய தொல்லியல் தளமாகும். பண்டைய பட்டுப் பாதையில் பாதுகாக்கப்பட்ட சிறந்த பாலைவனச்சோலை நகரங்களில் இதுவும் ஒன்றாகும். [4]
மேரி பிராந்தியத்தின் தலை நகரான மேரி நகரமாகும். இது கரகம் கால்வாயுடன் முர்காப் ஆற்றின் சந்திப்பில் அமைந்துள்ளது. ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள பேரமலி, சோலட்டன், மற்றும் செர்ஹெட்டாபாத் போன்றவை பிற முக்கிய நகரங்கள் ஆகும்.