மாமல்லபுர மரபுச்சின்னங்கள்
From Wikipedia, the free encyclopedia
மாமல்லபுர மரபுக்கோயில்கள் அனைத்தும் பல்லவர்களால் உருவாக்கப்பட்ட கோயில்களாகும். இவை கோரமண்டல் கரையில் 7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. இவை 1984ல் யுனெஸ்கோ அமைப்பின் உலக மரபுச்சின்ன பட்டியலில் இடம்பெற்றது. இந்த 2000 வருட பழமையான கோயில் நகரத்தில் 40க்கும் மேற்பட்ட முக்கிய கோயில்கள் இருந்ததாக அறியப்படுகிறது. இவை மாமல்லன் என்றழைக்கப்படும் முதலாம் நரசிம்ம பல்லவன் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களாகும்.
விரைவான உண்மைகள் மாமல்லபுர மரபுச்சின்னங்கள், வகை ...
மாமல்லபுர மரபுச்சின்னங்கள் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | பண்பாட்டுக் களம் |
ஒப்பளவு | i, ii, iii, iv |
உசாத்துணை | 249 |
UNESCO region | தெற்காசியா |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1984 (8வது தொடர்) |
மூடு
யுனெஸ்கோ அமைப்பு அங்கீகரித்துள்ள மாமல்லபுரக் கோயில்கள் நான்கு வகைப்பட்டவை. [1]:
- மாமல்லபுரம் இரதக் கோயில்கள்
- குகைக்கோயில்கள் அல்லது மண்டபங்கள்
- அர்ச்சுனன் பாவசங்கீத்தனம் என்றழைக்கப்படும் மாமல்லபுர கங்கை மரபுவழி சின்னங்கள்.
- மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்