மல்லிப்பேரினத்தின் இலைகள் இலையுதிர்/கூதிர் காலத்தில் உதிரும் இயல்புடையதாகவோ(deciduous), எப்பொழுதும் உதிராமல் பச்சை நிறத்தோடோ(evergreen) இருக்கும் வளரியல்புடன் கொண்டது. இதன் தண்டு நிமிர்ந்தோ, பரவலாக புதர் போன்றோ, படரும் கொடி போன்றோ வேறுபட்டு காணப்படும். இலைகளின் அமைப்பு எதிர் இலைகளாகவோ, எதிரெதிர் அமைப்போடு அமைந்திருக்கும். மேலும், இலைகள் எளியமையாகவோ, மூவிதல்களாகவோ(trifoliate), இலை நுனி குவிந்து ஊசி போலவோ(pinnate) காணப்படுகின்றன. இப்பேரினப் பூக்களின் விட்டம் ஏறத்தாழ 2.5 செ. மீ. இருக்கும். பெரும்பான்மையான பூக்கள் வெந்நிறமாக இருந்தாலும், வெந்நிறத்தோடு இளஞ்சிவப்பு நிறம் கலந்தும், சில பூக்கள் இளஞ்சிவப்பு கலந்தும், மஞ்சள் நிறமாகவும் காணப்படுகின்றன.
வெண்மை Jasminum sambac
மஞ்சள் Jasminum mesnyi
வெண்மை+இளஞ்சிவப்பு Jasminum polyanthum
பின்னால் இளஞ்சிவப்பு Jasminum nitidum
எதிர் இலையமைவு (opposite, pinnate)
மூவிதழ் இலையமைவு (trifoliate)
Jasminum auriculatum சித்தூர் மாவட்ட தலக்கோணாக் காட்டில் மல்லிகை முல்லையின் தண்டு அமைவு
Jasminum coarctatum மல்லிப் பழங்கள்
சொற்பிறப்பியல்
அரபி மொழியில், யாச(அ)மின் (ياسمين), என்றும்; இந்த அரபிச்சொல்லுக்கு "இனிய நுறுமணமுள்ள தாவரங்கள்" என்பது பொருளாகும். [12] பாரசீக மொழியில் யாசுசுமின் (یاسمین) என்றும்; உருது மொழியில் یاسمینی அல்லது یاسمین بو என்றும் அழைப்பர். மேலும், மல்லிப்பூவின் வாசனை எண்ணெக்கான பெயர்கள், சில கிரேக்க சொற்களோடு (iasme, iasmelaion) ஒப்பீடும் செய்யப்படுகிறது. 1570 ஆம் ஆண்டுகளில், பிரஞ்சு மொழியில் jasmin என்ற சொல்லும், அதற்கு முன்னர் jessemin என்ற சொல்லும் பயன்பாட்டில் இருந்துள்ளன. பிரஞ்சு மொழியில் இருந்து, பல செருமானிய மொழிகளில் இச்சொல்லின் வேறுபட்ட வடிவங்கள் தோன்றியது எனலாம். பதினாறாம் நூற்றாண்டில் இத்தாவர வகை இங்கிலாந்தில் முதன்முதலாக வளர்க்கப்பட்டதாக அறிய முடிகிறது. [13]
பல்வேறு நாடுகளில் அன்றாட வாழ்விலும், கலாச்சாரத்திலும், சடங்குகளிலும் இம்மலர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் விவரம் வருமாறு;—
குறியீட்டியம்
பல நாடுகளிலும், மாநிலங்களிலும் மல்லிப் பேரின மலர்கள் தேசிய சின்னமாகவும், திருமண நிகழ்வுகளிலும், நீத்தார் சடங்குகளிலும் முக்கிய குறியீட்டியமாகப்(symbolism) பின்பற்றப்படுகிறது. அவற்றில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இந்திய பெண்கள் தங்கள் தலையிலும், இறைவனுக்கும் மல்லிச் சரங்களைச் சாத்துவர்.
ஹவாய்: இருள்நாறி ("pikake) என்ற மலரை 'லெய்'(lei (garland)) என்ற மாலையாகவும், பல நாட்டு பாடல்களுடனும் தொடர்புடையது. "பிரேசிலியன் மல்லிகை" என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. [20]
பாக்கித்தான்: மௌவல்(chambeli or yasmin) என்ற மலரானது தேசிய மலராகும். "சம்பேலி " அல்லது "யாஸ்மின் " என அழைப்பர் [22]
பிலிப்பீன்சு: 1935 இல் அறிமுகம் செய்யப்பட்ட இருள்நாறி என்ற மலர், இந்நாட்டின் தேசிய மலராகும். சமப்கியுட்டா ("sampaguita" ) என்றழைக்கப்படும் இத்தாவரம், மதச்சடங்கு மாலைகளில் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. [23]
இந்தியா முழுவதிலும், குறிப்பாக ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், மஹாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மேற்கு மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் (ரோஜா மற்றும் இதர மலர்களைப் போல பிரபலமாக) இல்லத்து பூசைகளிலும், (இல்லத்துப் பெண்களும் சிறுமிகளும்) தலையில் சூடிக் கொள்ள வீட்டுத் தோட்டங்களிலும், வீட்டைச் சுற்றிலும் பானைச் செடியாகவும் வளர்க்கின்றனர். மேற்கூறிய அனைத்துப் பயன்பாடுகள் மற்றும் (வாசனைத் திரவியத் தொழில் போன்ற) இதரப் பயன்பாடுகளுக்காக விவசாய நிலங்களில் விற்பனைக்காகவும் பயிராகிறது.
மகாராட்டிரம் மாநிலத்தின் மும்பை தொடங்கி தெற்காக இந்தியாவின் பல இடங்களிலும் மல்லிகை மலரை விற்போர், நகர வீதிகள், கோயில் சுற்றுப்புறங்கள், பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பெரும் வணிகவிடங்கள் போன்றவற்றில் அதனை ஆயத்த மாலைகள் என்றாகவோ அல்லது மோத்தியா அல்லது மொகாரா என்னும் அதன் அடர் வகையின் மலர்க் கொத்துக்களை அவற்றின் எடையின் அடிப்படையிலோ விற்பதைக் காணலாம். இது கொல்கொத்தாவிலும் அன்னியமான காட்சியல்ல. வடமாநிலப் பெண்களும் சிறுமிகளும் பொதுவாக கூந்தலில் மலர்களைச் சூடுவதில்லை என்பதால், தெருவோர விற்பனைகள் அங்கு குறைவாகவே காணப்படும்.
மல்லிகை மலரை தென்னிந்திய பெண்டிர், அதன் மணம் மற்றும் அழகுக்காகவே தம் கூந்தலில் சூடுகின்றனர். மேலும், இது திருமணம் போன்ற முக்கியமான நிகழ்வுகளில் மலர் அலங்காரங்களுக்கும் பயன்படுகிறது.
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பங்களா பகுதியில் பயிராகும் மல்லிகை மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.[மேற்கோள்தேவை]
மல்லிப்பேரினத்தில் மலரும் பூக்களை விற்கும் பூவியாபாரிகள் மாலைகளாகவும், உதிரிப்பூக்களாகவும், பூச்சரமாகவும் கட்டி விற்கின்றனர்.[25] இவை கடவுள் வழிபாட்டுத் தலங்களிலும்,[26] பெண்கள் தலையில் சூடவும், நீத்தார் சடங்குகளிலும் இம்மலர்கள் பயன்படுத்தப் படுகின்றன.
இந்திய மத வழிபாடுகளிலும், இசுலாமிய நடைமுறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.[27]
பூவியாபாரம் இந்தியாவெங்கும் நடைபெறுகிறது.உலர்ந்த இவ்வகை மலர்களும் விற்பனைக்கும், ஏற்றுமதிக்கும் பயன்படுகின்றன. மல்லிதேநீர் விற்பனையும் சில இடங்களில் நடைபெறுகின்றன.[28]
தமிழ்நாட்டின் நடு மாவட்டங்களான சேலம், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களின் சிற்றூர்களான ஆத்தூர், வ. களத்தூர் போன்ற சிற்றூர்களில் வயிற்றுப்போக்கு, பேறுகாலத்தில் சுரக்கும் தாய்ப்பால் கட்டுபாடு தேவைப்படும் சூழ்நிலைகளில் மல்லிகைப் பூவினை(மார்பங்களில் சரமாக வைத்துக் கொள்வதால் அதிகமாக உள்ள தாய்ப்பால் சுரப்பு, குறைவதாக தாய்மார்கள் கூறுகின்றனர்.) பயன்படுத்துகின்றனர். இருப்பினும், இத்தகைய பயன்பாடுகள் மருத்துவர்களின் வழிகாட்டுதல்படி செய்தல் நல்லது.[29][30]
இந்தியப் பெயர்கள்
இந்தியாவில் மல்லிகை மலரை, அதன் இன வகையைப் பொறுத்து, பல மொழிகளிலும், சில இடங்களில் ஒரு பெயராகவும், பிறவற்றில் வேறு பெயர்களிலுமாக பல பெயர்களில் வழங்குகின்றனர். அவற்றில் சில பின்வருமாறு:
சமிஸ்கிருத மொழியில் "மாலதி " அல்லது "மல்லிகா " என்பர். "மோத்தி " என்னும் சொல், (சமிஸ்கிருத மொழியில் "முக்தா " அல்லது "முக்தாமணி " அல்லது "மௌடிகா " எனப்படுகிறது. (முக்தா என்பதற்கு சுதந்திரமான, தளைகளற்ற என்னும் ஒரு பொருளும் உண்டு).
இந்தி மொழியில் "சமேலி ", "ஜூஹி ", அல்லது "மோத்தியா " என அழைக்கின்றனர். இம்மொழியில் "முத்து " எனப் பொருள்படும். இந்த மலர் வெண் நிறம் கொண்டு, வட்ட வடிவமாக, அழகு மிகுந்து பார்வையிலும் அழகிலும் முத்துக்களை ஒத்திருப்பதால் "மோத்தியா " என்னும் பெயர் பெற்றது.
மராத்தி மொழியில், "ஜாயீ ", "ஜூயீ ", "சாயாலீ ", "சமேலி " அல்லது "மொகாரா " என இதனை வழங்குகின்றனர்.
வங்காள மொழியில் "ஜூயி " என்கின்றனர்.
தமிழ்நாடு "மல்லிச்சரம்"
கோயிலில் "பூச்சர" விற்பனை
சென்னையின் பெருமல்லிகை மொட்டு. இவ்வகை மல்லிகள் வணிகத்திற்கு குறைவாகவே பயனாகின்றன.
மல்லித் தாம்பூல வரவேற்பு
வங்கத்திருமண மாலை
தாவரவியல் வகைப்பாட்டின்படி வேறுபட்டு இருக்கும் சில தாவர இனங்களின் பெயர்கள், இப்பேரினப் பெயர்களைப் போன்றே, பொது மக்கள் அழைப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முல்லைக் குடும்பம் (Oleaceae Hoffmanns. & Link
First published in Fl. Portug. [Hoffmannsegg] 1: 62. 1809 [1 Sep 1809] (as "Oleinae") (1809) nom. cons.)
USDA, ARS, National Genetic Resources Program. "Jasminum L." Germplasm Resources Information Network, National Germplasm Resources Laboratory. Archived from the original on January 26, 2012. பார்க்கப்பட்ட நாள் November 22, 2011.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
Anabel Bachour (23 February 2017). "Damascus, the City of Jasmine". Peacock Plume, Student Media, The American University of Paris, France. பார்க்கப்பட்ட நாள் 1 அக்டோபர் 2023.
"African Plants Database". Natural History Museum of Geneva.{{cite web}}: Text "South African National Biodiversity Institute, the Conservatoire et Jardin botaniques de la Ville de Genève and Tela Botanica" ignored (help)
"Agricultural Research Service". GRIN-Global. United States Department of Agriculture/U.S. National Plant Germplasm System. பார்க்கப்பட்ட நாள் 2023-09-01.
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.