மலேசிய அரசர்
From Wikipedia, the free encyclopedia
மலேசிய அரசர் அல்லது யாங் டி பெர்துவான் அகோங் (ஆங்கிலம்: The Yang di-Pertuan Agong; மலாய்: Yang di-Pertuan Agong) என்பவர், மலேசியா நாட்டின் பேரரசர் ஆவார். 1957-ஆம் ஆண்டு, பிரித்தானியாவிடம் இருந்து மலாயா கூட்டரசு தன்னுரிமை பெற்ற போது, பேரரசர் பதவி உருவாக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் மாட்சிமை தங்கிய அரசர் Yang di-Pertuan Agong يڠدڤرتوان أݢوڠ, Type ...
மாட்சிமை தங்கிய அரசர்
Yang di-Pertuan Agong يڠدڤرتوان أݢوڠ | |
---|---|
பேரரசர் சின்னம் | |
Type | சட்டப்படியான முடியாட்சி; தேர்வு முறை; கூட்டரசு முடியாட்சி |
வாழுமிடம் | இசுதானா நெகாரா மலேசியா கோலாலம்பூர் |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள் |
அரசமைப்புக் கருவி | மலேசிய அரசியலமைப்பு Constitution of Malaysia#Article 32 |
உருவாக்கம் | 31 ஆகத்து 1957; 66 ஆண்டுகள் முன்னர் (1957-08-31) |
முதலாமவர் | துவாங்கு அப்துல் ரகுமான் |
துணை மாட்சிமை தங்கிய அரசர் | துணைப் பேரரசர் Timbalan Yang di-Pertuan Agong |
ஊதியம் | ரிங்கிட் ஆண்டுக்கு 1,054,560[1] |
இணையதளம் | www |
மூடு
அரச அமைப்புக்கு உட்பட்ட ஒரு முடியரசு நாடான மலேசியாவில், தேர்வு செய்யப்பட்ட ஓர் அரசர், நாட்டின் அரசத் தலைவர் ஆகிறார். உலக நாடுகளில் தேர்வு மூலமாக அரசராகிறவர்களில், யாங் டி பெர்துவான் அகோங் அவர்களும் ஒருவராவார். யாங் டி பெர்துவான் அகோங் அவர்களின் துணைவியார், மலேசிய அரசி, இராஜா பரமேசுவரி அகோங் என அழைக்கப் படுகிறார்.[2]