மலாக்கா சுல்தானகம்
From Wikipedia, the free encyclopedia
மலாக்கா சுல்தானகம் (மலாய் மொழி: Kesultanan Melaka; ஆங்கிலம்: Sultanate of Malacca; ஜாவி: کسلطانن ملاک); என்பது பரமேசுவரா எனும் சிங்கப்பூர் அரசரால் 1400-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட ஒரு சுல்தானகம் ஆகும். பரமேசுவரா என்பவர் இசுகந்தர் ஷா என்றும் அழைக்கப் படுகிறார்.[1]
விரைவான உண்மைகள் மலாக்கா சுல்தானகம்Malacca Sultanateكسلطانن ملايو ملاك, தலைநகரம் ...
Malacca Sultanate كسلطانن ملايو ملاك | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1402–1511 | |||||||||||||
தலைநகரம் | மலாக்கா | ||||||||||||
பேசப்படும் மொழிகள் | மலாய் | ||||||||||||
சமயம் | இசுலாம் | ||||||||||||
அரசாங்கம் | Monarchy (மரபுவழி அரசாட்சி) | ||||||||||||
சுல்தான் | |||||||||||||
வரலாறு | |||||||||||||
• தொடக்கம் | 1402 | ||||||||||||
1511 | |||||||||||||
நாணயம் | தங்க, வெள்ளிக் காசுகள் | ||||||||||||
|
மூடு
15-ஆம் நூற்றாண்டில், மலாக்கா சுல்தானகத்தின் அதிகார உச்சத்தில், தீபகற்ப மலேசியாவின் பெரும்பகுதிகளும்; ரியாவ் தீவுகளும் உள்ளடக்கியதாக இருந்தது. அதன் காலத்தில் மிக முக்கியமான கடல்சார் துறைமுகங்களில் ஒன்றாகவும் விளங்கியது.[2]
பரபரப்பான பன்னாட்டு வர்த்தக துறைமுகமாகவும்; இஸ்லாமிய கற்றல் மற்றும் பரப்புதலுக்கான மையமாகவும் உருவெடுத்தது. மேலும் மலாய் மொழி, இலக்கியம் மற்றும் கலைகளின் வளர்ச்சிக்கும் ஊக்கமளித்தது.[3]