மலபார் புனுகுப் பூனை
From Wikipedia, the free encyclopedia
மலபார் புனுகு பூனை (Malabar large-spotted civet)(விவேரா சிவெடினா) என்பது இந்தியாவில் வாழும் புனுகுப் பூனை இனங்களில் மிக அரிய விலங்கினமாகும். இதனை மலையாளத்தில் சாவாதி வெருகு - ജാവാദി വെരുകു് என்றும் கன்னடத்தில் சிரதே பெக்கு என்றும் அழைப்பர். மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்குத் தனிச் சிறப்பான மலபார் புனுகு பூனைகள் ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் கேரள, கர்நாடக மாநிலங்களின் தாழ்நிலக் கரையோரப் பகுதிகளில் நிறைந்து காணப்பட்டன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இவ்வினம் அருகிவிட்ட போதும் 1960கள் வரையில் இவ்வினத்திலிருந்து புனுகு பெறப்பட்டது. 1990-ல் தென்மலபார் பகுதியில் இவை குறைந்த எண்ணிக்கையில் வாழ்ந்தன.[3] 1999-ல் இந்தச் சிற்றினத்தில் வெறுமனே 250க்கும் குறைவான விலங்குகளே இயலிடத்தில் வாழ்வதாகக் கணிக்கப்பட்டது.[4]
விரைவான உண்மைகள் மலபார் புனுகு பூனை, காப்பு நிலை ...
மலபார் புனுகு பூனை[1] | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | விவேரிடே |
பேரினம்: | விவேரா |
இனம்: | வி. சிவெடினா |
இருசொற் பெயரீடு | |
விவேரா சிவெடினா பிளைத், 1862 | |
மலபார் புனுகு பூனையின் பரம்பல் |
மூடு