![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c4/Calicut_Beach_100.jpg/640px-Calicut_Beach_100.jpg&w=640&q=50)
மலபார் மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
இக்கட்டுரை ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்டபோது இருந்த மலபார் மாவட்டத்தைப் பற்றியது.
மலபார்
മലബാര് | |
---|---|
மாவட்டம் | |
![]() | |
![]() மலபார் மாவட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளா |
• அடர்த்தி | 816/km2 (2,110/sq mi) |
மொழிகள் | |
• அலுவல்முறையாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
ஐஎசுஓ 3166 குறியீடு | [[ISO 3166-2:IN|]] |
வாகனப் பதிவு | KL-09 to KL-14,KL-18,KL-49 to KL-60,KL-65 and KL-70 to KL-73 |
மொத்த மாவட்டங்கள் | 6 (காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, மலப்புறம், பாலக்காடு, வயநாடு) |
மிகப் பெரும் நகரம் | கோழிக்கோடு |
படிப்பறிவு | 91.74% |
தட்பவெப்ப நிலை | வெப்ப மண்டலம் (கோப்பென்) |
மலபார் மாவட்டம் (Malabar District) இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்டபோது சென்னை மாகாணத்திற்கு உட்பட்ட ஒரு மாவட்டமாக இருந்தது. இந்த மாவட்டமானது சுதந்திரத்திற்குப் பின் மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பதற்கு முன் சென்னை மாநிலத்திற்குடபட்ட ஒரு மாநிலமாக இருந்தது. இம்மாவட்டம் தற்போதைய மாவட்டங்களான கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புறம், பாலக்காடு (ஆலத்தூர் மற்றும் சித்தூர் தாலுகாக்கள் தவிர்த்து) மற்றும் திருச்சூர் மாவட்டத்தின் சாவக்காடு தாலுகா ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. தற்போதைய கர்நாடகத்தின் சில கடலோரப் பகுதிகளையும் உள்ளடக்கி இருந்தது. இம்மாவட்டமானது மேற்கே அரபிக்கடலையும் கிழக்கே மேற்குத் தொடர்ச்சி மலையையும் வடக்கே தென்கனரா மாவட்டத்தையும் தெற்கே கொச்சி சமஸ்தானத்தையும் எல்லைகளாகக் கொண்டிருந்தது. இம்மாவட்டமானது மொத்தம் 15,009 சதுர கிலோமீட்டர்கள் பரப்பைக் கொண்டிருந்தது. மேலும் 233 கிலோமீட்டர்கள் நீளமுள்ள கடற்கரையையும் கொண்டிருந்தது. மலபார் என்பதற்கு மலைநாடு என்று பொருள். கோழிக்கோடு மலபார் மாவட்டத்தின் தலைநகரமாக இருந்தது.
இந்துக்கள் முதன்மையாக உள்ள இந்தப் பகுதியில் கேரளாவின் பெரும்பாலான முஸ்லிம் மக்கள் இங்கு வாழ்கின்றனர். இவர்கள் மாப்பிளமார் என அறியப்படுகின்றனர். மேலும் தொன்மையான சிரியன் மலபார் கிறித்தவர்களும் இங்கு வாழ்கின்றனர்.[1]